கருமலையூற்று மலையில் நாளை ஜும்ஆத் தொழுகை!
Thursday, December 18, 20140 comments
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கையேற்கப்பட்ட கருமலையூற்று ஜும்ஆ பள்ளிவாசலில் எதிர்வரும் நாளை 2014.12.19 மீண்டும் ஜும்ஆத் தொழுகை இடம்பெறவுள்ளது. பளைய பள்ளிவாசல் இடிக்கப்பட்டடுள்ள நிலையில் இராணுவத்தினரால் சிறியி கூடாரம்போன்ற கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத்தின் பின்பு இடம்பெறும் ஜும்ஆத் தொழுகையில் பெருந்தொகையான மக்கள் வருகை தரவுள்ளதாக பள்ளிவாசல் நிருவாக சபைச் செயலாளர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார்.
தொன்மையான பள்ளிவாசல் உடைத்தழிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள கூடாரத்திலேயே ஜும்ஆ தொழுகை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment