ஜனாதிபதி தொலைபேசியில் என்னை திட்டினார் – ஹிருணிக்கா
Wednesday, December 31, 20140 comments
தனது தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற தினத்தில் ஆற்றிய உரையின் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னை தொடர்பு கொண்டு திட்டியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
தாய் மற்றும் தன்னை வீட்டில் இருந்து விரட்டுமாறு ஜனாதிபதி, அம்பாந்தோட்டை மாநகர மேயர் எராஜ் பெர்ணான்டோவுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசியமற்ற பேச்சுகளை பேசி அரசாங்கத்தை கவிழ்க்க பார்க்கின்றாயா என ஜனாதிபதி தொலைபேசியில் தன்னை திட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இன்று நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே ஹிருணிக்கா இதனை தெரிவித்துள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment