மைத்திரிபால பொதுவேட்பாளரானால் அவருடன் முஸ்லிம் காங்கிரஸ் பேசும்?

Friday, November 21, 20140 comments



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் சற்று தடுமாறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கிடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடைபெற்றுள்ளன.

எனினும் மேலாதிக்க மனோபாவத்துடன் அமைச்சர் பசில் நடந்து கொள்வதும், தமது கோரிக்கைகளை உதாசீனப்படுத்துவதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன களமிறங்கும் பட்சத்தில், அவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.

அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாகவும் அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham