உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் குறித்த அறிக்கை கிடைக்கவில்லை – சபாநாயகர்
Friday, November 21, 20140 comments
உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் குறித்த பூரண அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் சமால் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியுயைடவரா என்பது குறித்து கேள்விக்கு உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோரப்பட்டிருந்தது. இந்த சட்ட விளக்க அறிக்கை ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருந்தது.
சட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட சட்ட விளக்க அறிக்கையை மக்களுக்கு பகிரங்கப்படுத்த முடியாது என அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதியிடம் அந்த அறிக்கையின் பிரதியொன்றை பெற்றுக் கொண்டு தருமாறு ஜோன் அமரதுங்க, சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
தமது சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அடிக்கடி சந்திப்பதில்லை எனவும், இதனால் அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Post a Comment