ஸ்ரீகோத்தாவில் ரணில் - மைத்திரி இரகசிய சந்திப்பு
Saturday, November 22, 20140 comments
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் இந்த சந்திப்பு மூடிய அறைக்குள் மிக இரகசியமாக இடம்பெற்றுள்ளது.
தாம் பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த பின்னர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்காக ஸ்ரீகோத்தா சென்றார்.
இதன் பின்னர் இரண்டு தலைவர்களும் மூடிய அறைக்குள் பல்வேறு விடயங்கள் தொடர்பில கலந்துரையாடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க, சந்தோசமான வெளிப்பாட்டை காட்டியதாக கட்சி தரப்புக்கள் தெரிவித்தன.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment