அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம்

Sunday, November 9, 20140 comments


தமக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பில் தடை இருக்கின்றதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த வாரம் உயர் நீதிமன்றத்துக்கு விடுத்த கோரிக்கை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு நாளை 10 ஆம் திகதி வெளியிடப்பட்டவுடன் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படலாமென்று சிங்களப் பத்திரிகையொன்று எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி. க்கள் சிலர் அரசாங்கத்துக்கும் அரச தரப்பிலிருந்து அமைச்சர்கள் உட்பட எம்.பி.க்கள் எதிர்க்கட்சிக்கும்  மாறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கும் மேலாக சந்திரிகா பண்டாரநாயக அரசாங்கத்திலிருக்கும் ஸ்ரீ.ல.சு. கட்சியிலுள்ள தமக்கு ஆதரவான அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் ஐ.ம.சு. முன்னணிக்கு  தமது கட்சி முன்வைத்துள்ள ஆலோசனைகள் தொடர்பாக இவ்வாரத்துக்குள் திருப்திகரமான பதில் கிடைக்கா விட்டால் அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு ஜாதிக ஹெல உறுமய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham