தமிழ், முஸ்லிம் மக்களை நம்பியே களமிறங்குகின்றோம் - ஐ.தே.க
Sunday, November 16, 20140 comments
அரசாங்கத்தை வீழ்த்தும் பொது எதிரணியில் சிங்கள மக்களை போல் தமிழ், முஸ்லிம் மக்களையும் நம்பியே களமிறங்குகின்றோம். பொதுஎதிரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எம்முடன் கைகோர்க்க
வேண்டும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி எமது அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் எனவும் குறிப்பிட்டது.
பொது எதிரணிக் கூட்டிற்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பொது எதிரணி என்ன செய்யப் போகின்றது என்பன தொடர்பில் வினவிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
அரசாங்கத்தின் மீதான அதிருப்தி சிங்கள மக்களுக்கு இருக்கின்றது. ஆனால்இ அதைவிட அதிகமான வெறுப்பும் அதிருப்தியும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கே இருக்கின்றது. அவர்கள் ஒரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை. இன்று வடக்கு கிழக்கில் இடம்பெறும் அடக்கு முறைகளும் இனவாதச் செயற்பாடுகளும் முற்றிலும் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றில் சிக்கித் தவிக்கும் சிறுபான்மை மக்கள் இனியும் இந்த அரசை ஆதரிக்கப் போவதில்லை என்றார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment