தமிழ், முஸ்லிம் மக்­க­ளை நம்­பியே கள­மி­றங்­கு­கின்றோம் - ஐ.தே.க

Sunday, November 16, 20140 comments


அர­சாங்­கத்தை வீழ்த்தும் பொது எதி­ர­ணியில் சிங்­கள மக்­களை போல் தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் நம்­பியே கள­மி­றங்­கு­கின்றோம். பொதுஎதி­ர­ணியில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் எம்­முடன் கைகோர்க்க

வேண்டும் என தெரி­விக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி எமது அர­சாங்­கத்தில் தமிழ் மக்­களின் இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு எட்­டப்­படும் எனவும் குறிப்­பிட்­டது.

பொது எதி­ரணிக் கூட்­டிற்­காக தமிழ் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வீர்­களா? இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு விட­யத்தில் பொது எதி­ரணி என்ன செய்யப் போகின்­றது என்­பன தொடர்பில் வின­விய போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான லக்ஸ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

அர­சாங்­கத்தின் மீதான அதி­ருப்தி சிங்­கள மக்­க­ளுக்கு இருக்­கின்­றது. ஆனால்இ அதை­விட அதி­க­மான வெறுப்பும் அதி­ருப்­தியும் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கே இருக்­கின்­றது. அவர்கள் ஒரு சந்­தர்ப்­பத்­திலும் அர­சாங்­கத்தை ஆத­ரிக்கப் போவ­தில்லை. இன்று வடக்கு கிழக்கில் இடம்­பெறும் அடக்கு முறை­களும் இன­வாதச் செயற்­பா­டு­களும் முற்­றிலும் அர­சாங்­கத்­தி­னா­லேயே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இவற்றில் சிக்கித் தவிக்கும் சிறு­பான்மை மக்கள் இனியும் இந்த அரசை ஆத­ரிக்கப் போவ­தில்லை என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham