முஸ்லிம்களின் கலாசாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் - ரணிலிடம் கோரிக்கை
Friday, November 7, 20140 comments
முஸ்லிம் சமூகத்தின் மத கலாசார விழுமியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய சம்மேனனம் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட முகாமையாளரும் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளருமான எச்.எச். நஜிமுத்தீனின் ஆலோசனையில் மருதமுனை மத்திய சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ. சம்சுல் அமான், செயலாளர் எம்.ஏ. திலிப் நௌசாட் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள அந்த மகஜரில் தெரிவித்திருப்பதாவது;
தற்போதுள்ள கட்சி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தி எதிர்காலத்தில் வரக்கூடிய தேசிய ரீதியான தேர்தல்களுக்கு முகம் கொடுக்க கூடியவகையில் கல்முனை தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகள் மூலமே ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கிழக்கு மாகாண சபைக்கு சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படாமல் போகின்றார். இதற்கு நிவாரணம் அளிக்கின்ற வகையில் 3 வது பிரதிநிதியின் ஒதுக்கீடுகள் முஸ்லிம் பிரதேசங்களைச் சென்றடைவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
ஐக்கிய தேசிய கட்சியானது எதிர்காலத்தில் ஆட்சி அமைக்கின்ற போது தேவைப்படுமிடத்து சிறுபான்மை கட்சிகளுடன் தேர்தல் கால ஒப்பந்தங்கள் செய்யும் போது முஸ்லிம் பிரதேசங்களின் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் ஆதரவாளர்களின் தனித்துவம் சுயகௌரவம் அபிலாஷைகள் என்பன பாதிக்கப்படாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுப்பதோடு அம்பாறை மாவட்டத்திற்கான ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment