கற்களை வெடிவைத்து அகற்றியதாலேயே மண்சரிவு ஏற்பட காரணம் - இப்ழார்

Friday, November 7, 20140 comments



இரத்தினபுரி - வேவல்வத்தை வீதி அபிவிருத்தியின் போது கற்கள் வெடி வைத்து அகற்றப்பட்டதினாலேயே கலபட தோட்டம் மற்றும் கலபட தமிழ் வித்தியாலயம் என்பன மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. எனவே, இப்பகுதி தோட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள் அமைத்துக்கொடுப்பதுடன் உடனடியாக கலபட தமிழ் வித்தியாலயத்திற்கு தற்காலிக கட்டடமொன்றையாவது அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சப்ரகமுவ மாகாணசபையின் ஐ.தே.க உறுப்பினர் மொகமட் யெயிலா இப்ழார் தெரிவித்துள்ளார். அவரது காரியாலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்;

அரசாங்கம் திட்டமிடப்படாத அபிவிருத்தியால் கொழும்பு, களுத்துறை போன்ற பகுதிகள் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அதேவேளை மலையக தோட்ட மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து அரசாங்கத்திடம் கூறினால் எவ்வித பயனும் இல்லை. இதேவேளை, தோட்ட தொழிலாளர்கள் மண்சரிவினால் பாதிக்கப்படும்போது அரசாங்கம் அதற்கு உரியநடவடிக்கை எடுப்பதில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவினால் சுமார் 300க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கம் உரிய வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே ட்ரஸ்ட் நிறுவனம் கடன் அடிப்படையில் வீடுகள் அமைத்துக்கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோட்டத்தில் வேலை செய்யாத ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க தோட்ட நிர்வாகமும் ட்ரட்ஸ் நிறுவனமும் முன்வருவதில்லை. இவர்களுக்கு யார் வீடுகளை அமைத்துக்கொடுப்பார்கள்? இது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham