ஜனாதிபதி தேர்தல்: அரசின் பதிலுக்காய் காத்திருக்கிறோம் - மு.கா.

Sunday, November 16, 20140 comments


கிழக்கு மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைக்­கும்­போது அர­சாங்கம் உறுதியளித்த வாக்­கு­று­திகள் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளோம். அதன் பதில் கிடைத்த பிறகு எமது நிலைப்­பாட்டை வெளி­யி­டுவோம் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸனலி தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி: ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான முஸ்லிம் காங்­கி­ரஸின் தீர்மானம் என்ன?

நாம் இது­வரை எந்த தீர்­மா­னத்­திற்கும் வர­வில்லை. ஜனா­தி­பதி தேர்தல் குறித்து கட்சி மட்­டத்தில் ஆலோ­ச­னை­களை நடத்தி வரு­கின்றோம்.  நாம் கிழக்கு மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைக்­கும்­போது அர­சாங்கம் எமக்­க­ளித்த வாக்­கு­று­திகள் உள்­ளிட்ட பல விட­யங்­களை முன்­வைத்து ஜனா­தி­ப­திக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளோம். அதன் பதில் கிடைத்த பிறகு எமது கட்­சியின் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான நிலைப்­பாட்டை வெளி­யி­டுவோம்.

கேள்வி: ஜனா­தி­பதி தேர்­தலில் நீங்கள் ஆத­ரிக்கும் வேட்­பா­ள­ரிடம் எவ்வாறான கோரிக்­கை­களை முன்­வைக்க இருக்­கின்றீர்கள்?

முஸ்­லிம்­களின் தேசிய பிராந்­திய பிரச்­ச­ினைகள் தொடர்பில் அவர்­க­ளிடம் முன்­வைக்­க­வுள்ளோம். வாருங்கள் எங்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டுங்கள் என்று கூறும்­போது எடுத்த எடுப்பில் நாம் யாரு­டனும் இணைந்து செயற்­ப­டப்­போ­வ­தில்லை. எமக்­கென்­றொரு கொள்கை இருக்­கின்­றது. அது­போன்று எமக்­கா­ன­தொரு பொறுப்பும் இருக்­கின்­றது. இவற்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு நாம் பல­கோ­ரிக்­கை­களை முன்­வைக்­க­வுள்ளோம். எமது நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொண்டு அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இணக்கம் தெரி­விப்­ப­வர்­க­ளையே ஆத­ரிப்போம்.

கேள்வி: ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான முன்­னெ­டுப்­புகள் எவ்­வாறு இருக்­கின்­றன?

இன்று இட­து­சா­ரிகள், வல­து­சா­ரிகள், சோச­லி­ச­வா­திகள், கொமி­யு­னிஸ வாதிகள் என்ற இருக்­க­மான நிலைப்­பா­டுகள் மாற்­றம்­பெற்று எல்­லோரும் கலந்­துள்­ளனர். இந்­நி­லையில் நாமும் எல்லா தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம். பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­டு­வதன் மூலம் அவர்­க­ளுடன் கூட்­டுக்கு முயற்­சிப்­பது என்­பது அர்த்­தப்­ப­டாது. எமது நிலைப்­பாட்­டையே அவர்­க­ளிடம் தெரி­விக்­கிறோம்.

கேள்வி: ஆளும் மற்றும் எதிர் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து மு.கா.விற்கு அழைப்­புகள் வரு­கின்­ற­னவா?

ஜனா­தி­பதி தேர்தல் தற்­போது இல்­ல­வி­ளை­யாட்டு போட்­டி­போன்று இருக்­கின்­றது. தங்­க­ளது வெற்­றிக்­காக யாரையும் கூட்­டு­ச்சேர்த்­துக்­கொள்­ளத்­த­யா­ராக இருக்­கின்­றனர். இந்­நி­லையில் சிறு­பான்மை மக்­களை பிர­தான கட்­சிகள் பெரி­தாக அலட்­டிக்­கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. ஆளும் தரப்­பி­லி­ருந்தும் ஐ.தே.க. உள்­ளிட்ட எதிர்­த­ரப்பும் நேர­டி­யாக அழைப்­பு­வி­டுக்­க­வில்லை. என்­றாலும் நாம் நிபந்­தனை அடிப்­ப­டை­யி­லேயே யாரை­யா­வது ஆத­ரிப்போம்.

கேள்வி: ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் மு.கா.வின் ஆத­ர­வா­ளர்­களின் நிலைப்­பாடு எவ்­வாறு இருக்­கின்­றது?

அண்­மையில் அம்­பா­றையில் இடம்­பெற்ற கூட்­ட­மொன்­றின்­போது ஜனா­தி­ப­திக்கு ஆதரவாக மு.கா.வில் சிலர் கருத்துக்களை முன்வைத்தபோது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை மையமாகக் கொண்டு மக்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். ஆதரவாளர்களின் எதிர்ப்பார்ப்புகளை பற்றியும் நாம் கவனத்திற்கொள்கிறோம்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham