ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் இணைகிறோம் - என்.எப்.ஜி.ஜி.

Sunday, November 16, 20140 comments


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (என்.எப்.ஜி.ஜி.) எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் நஜாமுஹம்மத் தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி: எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தல் தொடர்பில் நல்­லாட்­சிக்கான தேசிய முன்­னணியின் தீர்­மானம் எவ்வாறு அமைந்­துள்­ளது?

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி மக்­க­ளுக்கு விசு­வா­ச­மான  நல்­லாட்சி விழு­மி­யங்­களின் அடிப்­ப­டையில் சட்­டத்தின் ஆட்சி முறை­யொன்­றினை நிறுவும் நோக்கில் செயற்­படும் ஒரு அர­சியல் இயக்கம் என்ற வகையில் நாடு எதிர்­நோக்­கி­யுள்ள அர­சியல் நெருக்­க­டி­யி­லி­ருந்து  நாட்­டையும் மக்­க­ளையும் விடு­விப்­ப­தற்­கான முயற்­சியில் கள­மி­றங்­கி­யுள்ள தேசிய சக்­தி­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வந்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் பொது எதி­ர­ணி­யி­ன­ருடன் கூட்­டி­ணைந்து நல்­லாட்­சிக்­காக பாடு­ப­ட­வுள்­ளது.

கேள்வி: நீங்கள் எதிர்­க்கட்­சி­க­ளுடன் இணைந்து தேர்­தலில் கள­மி­றங்­கு­வதன் நோக்கம் என்ன?

இன்று  சட்டம், ஒழுங்கு, நீதி, ஜன­நா­யகம், சுதந்­திரம், பாது­காப்பு என்­பன சீர்­கு­லைந்­துள்­ளன.பொரு­ளா­தார முறையில் திருப்­தி­யில்லை. சகல துறை­க­ளிலும்  ஊழல், மோசடி, வீண்­வி­ரயம், அதி­காரத் துஷ்­பி­ர­யோகம் என்­பன மலிந்து காணப்­ப­டு­கின்­றன. நாட்டின் வளங்­களும், சொத்­துக்­களும் வெளி­நாட்டுக் கம்­ப­னி­க­ளுக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. குறு­கிய  அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக தேசிய ஒற்­றுமை மற்றும்  இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சக­வாழ்வு என்­ப­வற்­றிற்கு  குந்­தகம் விளை­விக்­கக்­கூ­டிய சூழலை இந்த அர­சாங்கம் தொடர்தும் விட்டு வைத்­துள்­ளது. இந்த நிலை­யி­லி­ருந்து நாட்­டினைப் பாது­காப்­பதும் விடு­விப்­பதும் இந்த நாட்­டி­லுள்ள ஒவ்­வொரு பிர­ஜையின் மீதுள்ள தலை­யாய கட­மை­யாகும். அதனை அடிப்­படை நோக்­கா­க­க்கொண்டோ நாம் தேர்­த­லில் கள­மி­றங்­கு­கின்றோம்.

கேள்வி: எதி­ர­ணி­யி­ன­ரு­ட­னான தேர்தல் நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன?

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமையை மேலும் வலுப்­ப­டுத்­தத்­தக்­க­தான 18வது திருத்­தச்­சட்­ட­ உருவாக்கப்பட்டு  அவர் மீது அப­ரி­மி­த­மான அதி­கா­ரங்­கள் குவிக்­கப்­பட்­டுள்ளன. எனவே தற்­போ­துள்ள நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை நீக்கி, 17 வது திருத்­தச்­ச­டட்­டத்­தி­னூ­டாக ஸ்தாபிக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை மீண்டும் உரு­வாக்கி, தேர்தல் முறை­க­ளிலும் தேவை­யான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த கோட்டே நாக விகாரையின் விகா­ரா­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரரின் தலை­மை­யி­லான சமூக நீதிக்­கான தேசிய இயக்கம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கி­றது.  எதிர்­கட்­சி­களின் கூட்­டணி சார்­பான பொது வேட்­பாளர் ஒரு­வரை எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­து­வ­தற்­கான தேசிய வேலைத்­திட்­டத்தில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் இணைந்­துள்­ளது.

அதே­நேரம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லிய ரதன  தேரர்  ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்றினை நடத்துவதற்குப் பதிலாக 19 ஆவது திருத்தச்சட்டத்தினூடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்து பாராளுமன்றத்திற்கும் அமைச்சரவைக்கும் அதிகாரங்களை அளிக்கத்தக்க வகையிலும் முன்னெடுத்துவரும் அரசியல் வேலைத்திட்டத்திலும் ஆதரவை வழங்க நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham