தம்புள்ளை முஸ்லிம் கடையின் பணியாற்றுபவர்கள் கைது; பொதுபலசேனாவும் தலையீடு
Thursday, November 13, 20140 comments
தம்புள்ளை நகரில் முஸ்லிம் கடையொன்றில் தொழில் புரியும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடைக்கு சென்ற பெண் ஒருவரிடம் தவரான முறையில் செயற்பட முயன்றமையினாலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் 4.30மணியளவில் கலேவலயை சேரந்த முஸ்ம்களுக்கு சொந்தமான கடையொன்றிற்கு வெ ளி பிரதேச பெண்ணொருவர் பொருட்கள் கொள்வனவிற்காக சென்றவேலையில் கடையில் வேலைசெய்த மரதன்கடவலயை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளார்.
இது தொடர்பில பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் கடையிலுள்ள ஆறு பேரை கைது செய்துள்ளதாகவும் குற்றம் புறிந்தவர் என கூறப்படும் இளைஞர் சம்பவத்தையடுத்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் நேற்று இரவு 7 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்றமையினால் பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பொதுபலசேனா இங்கு வருகை தந்தமையானது இச்சம்பவம் திட்டமிட்டு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment