யாருக்கு வாக்களிப்பது என்று முஸ்லிம் மக்கள் தீர்மானித்து விட்டனர்: அசாத் சாலி
Sunday, November 30, 20140 comments
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக கொழும்பு மாநகர முன்னாள் உதவி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிடம் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
பொதுபலசேனா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் போது முஸ்லிம் மக்கள் அவருக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்று தோரணையில் அவரின் கருத்து அமைந்திருந்தது.
சிறுபான்மையினர் மட்டுமன்றி பெரும்பான்மையினரும் மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதில் சங்கடங்களை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எப்போதும் நான்கு வகையிலான பிரசார பெயர்களை கொண்டு செயற்பட்டு வருகிறது.
டயஸ்போரா, என்ஜிஓ, வெளிச்சக்திகள், கொந்தராத்துக்காரர்கள் என்ற பெயர்களை சிங்கள மக்களிடம் கூறியே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்று சாலி கூறினார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment