தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்பு
Sunday, November 23, 20140 comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை டிசம்பர் 4ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இம்முறை தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்துள்ள அனைவரும் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment