வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பு நாளை
Sunday, November 23, 20140 comments
2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நாளையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதில் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில், அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று மாலை நடைபெறவுள்ள தமது கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இது குறித்த இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று, ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இன்று மாலை நடைபெறும் அரசியல் உயர் பீட கூட்டத்தின் போது இது குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
எனினும் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்க ஏற்கனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த வரவு செலுவத்திட்டம் இடம்பெயர்ந்த மக்களுக்கு எந்த நலனையும் வழங்காத நிலையில், அதற்கு எதிராக தங்களின் வாக்குகளை பிரயோகிக்க விருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து எந்த ஒரு அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரே அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என்று அமைச்சர் மகிந்தநந்த அழுத்கமககே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிக்கல் இன்றி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment