வெலிகமவில் நீரில் மூழ்கி 14 வயது மாணவன் பலி

Thursday, November 13, 20140 comments



வெலி­கம பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கொலே­தன்ட, அமு­னு­வத்த பிர­தே­சத்தில் பொல்­அத்து மோதர ஆற்­றுக்கு அருகில் சென்ற நான்கு மாண­வர்­களில் இருவர் ஆற்றில் இறங்­கிய போது இரு­வரும்  நீரில் மூழ்­கி­யுள்­ளனர்.

இதன் போது பிர­தேச வாசி­களால் மாண­வர்கள் இரு­வரும் மீட்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவு தெரி­விக்­கின்­றது.

வெலி­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த மொஹமட் ஹனிபா மொஹமட் ரிமாஸ் என்ற 14 வயது மாண­வனே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.

பிரேத பரி­சோ­தனை நேற்று வைத்­தி­ய­சா­லையில் இடம் பெறஇருந்­தது.
நீரில் மூழ்­கிய நிலையில் காப்­பாற்­றப்­பட்ட 15 வய­தான அடுத்த மாணவன் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்ற வரு­கின்றான். இது தொடர்பில் மேலதிக விசார ணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham