மத சடங்குகளை சரிவர நிறைவேற்ற இடமளிக்கப்பட வேண்டும் - தொழி­லாளர் சங்கம்

Sunday, October 12, 20140 comments


மல்­வானை முஸ்லிம் அனாதை நிலை­யத்தில் ஏற்­பட்ட சம்­ப­வ­மா­னது கண்­டிக்­கத்­தக்­க­தாகும். தங்­க­ளு­டைய மத சடங்­கு­களை சரி­வர நிறைவு செய்ய அந்த மதத்­த­வ­ருக்கு இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என ஐக்­கிய லங்கா தோட்ட தொழி­லாளர் சங்க தலைவர் ராஜு பாஸ்­கரன் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­வது;
பால் தரும் பசுக்கள் 365 நாட்­களும் இறைச்­சிக்­காக அறுக்­கப்­ப­டு­கின்­றன. அதை நிறுத்­தாது முஸ்­லிம்­களின் மத சடங்­கு­களில் தடை ஏற்­படும் விதத்தில் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­து இஸ்­லா­மி­யர்­களின் மனங்­களை புண்­ப­டுத்­து­வ­தா­க அ­மையும். நாட்டின் எதிர்­காலம் ஒரு கேள்­விக்­கு­றி­யாக மாறி­வி­டுமோ என்ற எண்ணம் தோன்­று­கின்­றது.

இந்த பசுக்­களை வெட்­டு­வ­தற்­கா­கதான் வாங்கி செல்­கின்­றார்கள் என தெரிந்து விற்­ப­வர்­களை முதலில் கண்­ட­றிந்து அவர்­களை அவ்­வாறு விற்­பனை செய்ய வேண்டாம் என அறி­வு­றுத்­தப்­பட வேண்­டுமே தவிர இஸ்­லா­மி­யர்­களின் புனித பெருநாள்  தினத்தில் உழ்ஹியாவிற்காக மாடு­க­ளையும் ஆடு­க­ளையும் அறுப்­பதை தடுப்­ப­தா­னது அநா­க­ரி­க­மான செய­லாகும்.

இவ்­வி­டயத்தில் அனைத்து அர­சியல் தலை­வர்­களும் மத தலை­வர்­களும் ஒன்­றி­ணைந்து இது போன்ற நிகழ்வு மீண்டும் ஏற்­ப­டா­த­வாறு ஒரு திட்டம் வகுக்க வேண்டும்.

இஸ்­லா­மி­யர்­களின் மத சம்­பி­ர­தா­யங்கள் சரி­வர கடைப்­பி­டிக்க அவர்­க­ளுக்கு துணை நிற்க வேண்டும்

இந்­துக்­க­ளுக்கும் தங்­க­ளு­டைய பாரம்­ப­ரிய திரு­வி­ழா­வா­கிய வேட்டைத் திரு­வி­ழாக்­களை நடாத்த விடாது தடுத்து வரு­கின்­றனர். அதற்கு கடந்த அரசு காலம் தொட்டு இன்­று­வரை அரசும் துணை போகின்ற ஒரு தொழிற்­சங்­க­வாதி என்ற நிலையில் நாம் இதற்கு முகம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.

தோட்ட தொழி­லா­ளர்கள் வரு­டந்­தோறும் காடு­க­ளிலும் மலை­க­ளிலும் மிக கஷ்­டத்தின் மத்­தியில் வேலை செய்து பல்­வ­கை­யான பிரா­ணி­க­ளி­டமும் இடி மின்னல் தாக்­கங்­க­ளி­லி­ருந்தும் இயற்கை அனர்த்­தங்­க­ளி­லி­ருந்தும் தங்­களை காப்­பாற்றிக் கொள்ள தொழி­லா­ளர்­களின் காவல் தெய்­வங்­க­ளி­டமும் குல தெய்­வங்­க­ளி­டமும் பல்­வ­கை­யான வேண்­டுதல் வைத்து தங்­க­ளு­டைய தொழி­லையும் தாங்கள் தொழில் புரியும் தோட்­டங்­க­ளையும் காக்க வேண்டும் என்று வேண்டி காவல் தெய்­வங்­க­ளுக்கு வேட்டை திரு­விழா நடத்த ஏற்­பா­டுகள் செய்து வேட்டை திரு­வி­ழாக்­களை நடத்த முடி­யா­த­வாறு இவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் இருந்து வரு­கின்­றன. வேட்டை திரு­வி­ழாக்­களை நடாத்த தடை செய்து அவர்­களின் மத சுதந்­தி­ரத்தை இல்லா தொழித்­துள்­ளனர்.

தோட்ட தொழி­லா­ளர்கள் மிக செறி­வாக வாழும் பகு­தி­களின் வேட்டைத் திரு­வி­ழாக்கள் மிக சிறப்­பாக நடை­பெ­று­கின்­றது. காலி, மாத்­தளை, களுத்­துறை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்­க­ளிலே நடாத்த முடி­யா­த­வாறு பல தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். இத் தடை­க­ளி­லி­ருந்து மீண்டும் எமது மத சடங்­கு­களை சரி­வர செய்ய அனைத்து மதத்தவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நேற்று இந்துக்களுக்கு இன்று இஸ்லாமியர்களுக்கு. நாளை யாருக்கோ?
இந்துக்களும் இஸ்லாமியர்களும் அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கங்களும் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய லங்கா தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் ராஜு பாஸ்கரன் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham