தைரி­ய­மில்­லா­த­தால் ஞான­சார தேரர் விவா­தத்­தி­லி­ருந்து நழுவிச் செல்­கிறார் - முஜிபுர் ரஹ்மான்

Sunday, October 12, 20140 comments


ஞான­சார தேரர் தான் விடுத்த நேரடி விவாத சவா­லி­லி­ருந்து நழு­வு­கின்­றமை அவரின் தயக்­கத்தின் வெளிப்­பா­டாகும் என தெரி­வித்த மேல்­மா­காண சபை உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான்  இதன்­மூலம் அவ­ரது சவால் வெறும் வாய்ச்­ச­வா­டலே என்­பது புல­னா­கி­றது எனவும் குறிப்­பிட்டர்.

பொது பல  சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் கொழும்பில் இடம்­பெற்ற சங்க சம்­மே­ளன கூட்­டத்­தின்­போது முஸ்லிம் தலை­வர்­களை நேரடி விவா­தத்­திற்கு வரு­மாறு அழைப்பு விடுத்தார். இந்­நி­லையில் இதனை ஏற்­றுக்­கொண்ட மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பொது­ப­ல­சேனா முன்­னெ­டுத்­து­வரும் பொய்ப் பிர­சா­ரங்கள் குறித்து நேரடி விவா­தத்­திற்கு தயா­ரென அறி­வித்து மேற்­படி அமைப்பின் செய­லா­ள­ருக்கு அவர் கடி­த­மொன்­றையும் அனுப்­பி­வைத்தார்.

இவ்­வி­டயம் தொடர்பில் மாகா­ண­சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரி­விக்­கையில்,

பொது பல சேனா அமைப்பும் அதன் செய­லா­ளரும் முன்­வைத்த குற்­றச்­சாட்­டுக்கள் உண்­மைக்கு புறம்­பா­ன­வை­யாகும். முஸ்லிம், சிங்­கள மக்கள் நீண்­ட­கா­ல­மா­கவே இந்­நாட்டில் மிகவும் நெருக்­க­மான உறவை பேணி வந்­துள்­ளனர். இந்­நி­லையில் முஸ்­லிம்­களால் பெரும்­பான்­மை­யி­ன­மான சிங்­கள மக்­க­ளுக்கு பல இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறி­யுள்­ளமை அப்­பட்­ட­மான பொய்­யாகும்.

ஞான­சார தேர­ரி­னதும் பொது­ப­ல­சே­னாவின் செயற்­பா­டு­களே முஸ்லிம், சிங்­கள இன உறவில் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வி­ட­யங்கள் குறித்து நேரடி தொலைக்­காட்சி விவா­தத்­திற்கு விரும்­பினால் வரு­மாறும், அதற்­கான நேரத்தை ஒதுக்­கு­வ­தற்­கான ஏற்­பாட்டை செய்­து­கொள்­ளலாம் என்றும் தெரி­வித்து கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்தேன். எனினும் அந்த கடி­தத்தை அவர் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

கொழும்பில் இடம்­பெற்ற சங்க சம்­மே­ளன மாநாட்டில் முஸ்லிம் தலை­வர்­க­ளையே விவா­தத்­திற்கு வரு­மாறு அவர் அழைப்பு விடுத்தார். எனினும் ஆளும் தரப்பு அர­சியல் தலை­வரா, எதிர்த்­த­ரப்பு அர­சியல் தலை­வரா அல்­லது வேறு தலை­வர்­களா என்று அவர் குறிப்­பி­ட­வில்லை.

இந்­நி­லையில் எனது சவாலை எற்­றுக்­கொள்­ளாத அவர் என்னை நெத்­தலி மீன்­க­ளுடன் விவா­திக்க தயா­ரில்லை எனக் கூறி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் அவர் கூறும் பெரிய மீன்கள் யார் என்று அவர் தெரி­விக்­க­வில்லை.

என்னைப் பொறுத்­த­வ­ரையில் இரண்டு தடவை மாகாண சபை உறுப்­பி­ன­ராக செய்­ற­பட்­டுள்ளேன். 20 வரு­டங்­க­ளாக அர­சி­யலில் ஈடு­பட்டு வரு­கின்றேன். இந்­நி­லையில் ஞான­சார தேரரை பற்றி பார்த்தால், அவர் எந்த விகா­ரை­யிலும் தலைமை பிக்­கு­வா­கக்­கூட இருந்­த­தில்லை.  சங்க சாசன பாது­காப்பு கமிட்­டி­யிலும் அவ­ருக்கு உறுப்­பு­ரிமை கிடை­யாது. இந்­நி­லையில் என்னை அவர் நெத்­தலி மீன் என தெரி­வித்­தி­ருக்­கின்­றமை  மிகவும் நகைப்­புக்­கு­ரி­ய­தாகும்.

அவர் அரசியலுக்காகவே இந்த வாய்சவாடல்களை விடுகிறார். உண்மையில் அவருக்கு நேரடி விவாதத்தில் கலந்துகொள்ளும் தைரியம் கிடையாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி பதவியில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான மதவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham