அளுத்கம துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய உத்தரவு

Sunday, September 14, 20140 comments


அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத தாக்குதல்களின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு களுத்துறை நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைகளில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி பிரயோகம் காரணமாக இந்த மரணங்கள் சம்பவித்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்தது. இதனடிப்படையில், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயிஷா ஆப்தீன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அளுத்கம இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சப்ராஸ் ஹம்சா, இரண்டு மரணங்களுக்கு துப்பாக்கி பிரயோகம் காரணமாக ஏற்பட்டது என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கியின் தோட்டா தலை பகுதிக்குள் சென்றதால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham