பதுளை பள்ளிவாசலை மையப்படுத்தி இன மோதலை ஏற்படுத்த முயற்சி
Thursday, September 18, 20140 comments
பதுளை பதுலுப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் முடிவில் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாக பிரதேசத்தில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் காரணம் பதுளை முஸ்லிம் பள்ளிவாசலில் கூட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே கூட்டம் நடைபெற்ற பள்ளிவாசலுக்கு எதிரில் கொலை செய்யப்பட்ட நாயின் உடலை சிலர் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
அத்துடன் பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை அடிப்படையாக கொண்டு இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இப்படியான சம்பவம் பற்றி தமக்கு தெரியவரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment