முஸ்லிம்கள் இன்னும் ஜனாதிபதியையே நம்பியிருக்கின்றனர் - பிரதியமைச்சர் காதர்

Tuesday, September 23, 20140 comments


முஸ்லிம்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்வதில் ஜனாதிபதியையே நம்பியிருக்கிறார்கள். ஊவா தேர்தல் முடிவுகள் இதனையே தெரிவிக்கின்றன என சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்தார்.


ஊவா முஸ்லிம்கள் முஸ்லிம் பிரதி நிதித்துவத்தையே நிராகரித்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியில் இருவரும் ஜே.வி.பி. யில் இருவரும் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தில் முஸ்லிம்களும் போட்டியிட்டும் ஒரு பிரதி நிதித்துவம் கூட கிடைக்கவில்லை.

முஸ்லிம் வாக்காளர்கள் நிலை தடுமாறாது அரசுக்கே  ஆதரவளித்துள்ளார்கள். இதனை ஜனாதிபதி உணர்ந்து கொண்டுள்ளார். எனவே, வெற்றிலைக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்த முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் நம்பிக்கை கொள்ள முடியும்.

வெற்றிலையை வெற்றியடையச் செய்த முஸ்லிம் மக்களுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham