ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்களுக்கு அக்கறையில்லை - லாபிர் ஹாஜியார்

Sunday, September 7, 20140 comments


மலை­யக  பெருந்­தேட்ட தமிழ்­மொழி பாட­சா­லை­க­ளுக்கு ஆச­ரியர் நிய­மனம் தொடர்பில் தமிழ் தலை­வர்கள் அக்­கறை காட்­டி­யது போன்று முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரியர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்­வ­தற்கு எவ்­வி­த­மான அக்­க­றை­யையும் காட்­ட­விலை. இதனால் எதிர்­கால முஸ்லிம் சமூ­கத்­திற்கு பேரி­ழப்பு ஏற்­படும் என மத்­தி­ய­மா­காண சபை ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் ஜெய்னுல் ஆப்தீன் (லாபிர் ஹாஜியார்) தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,
மலை­யக தமிழ் பாட­சா­லை­களில் நிலவும் ஆசி­ரியர் வெற்­றி­டத்­தினால் எதிர்­கால தமிழ் சமூகம் பெரிதும் பாதிக்­கப்­படும் என்­பதை உணார்ந்த மலை­யக தமிழ் தலை­மைகள் போராடி அவ்­வெற்­றி­டங்­களை நிரப்ப புதிய நிய­ம­னங்­களை வழங்க நட­வ­டிக்கை எடுத்­தது. அதே­போன்று கண்டி, பதுளை, கேகாலை, குரு­ணாகல், களுத்­துறை, மாத்­தளை, இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தறை, நுவ­ரொ­லியா உள்­ளிட்ட மலை­யக பகு­தி­க­ளி­லி­லுள்ள தமிழ்­மொ­ழி­மூல பாட­சா­லை­களில் முஸ்லிம் பாட­சா­லை­களும் உள்­ள­டங்கும். ஆன­போ­திலும் மலையக பெருந்­தோட்­டப்­புற தமிழ் பாட­சா­லை­களில் நிலவும் வெற்­றி­டங்­க­ளுக்­கா­கவே தற்­போது ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் முஸ்லிம் பாட­சா­லைகள் இதன்­போது உள்­ள­டக்­கப்­ப­டாது திட்­ட­மிட்டு புறக்­க­ணிக்­கப்­பட்­ட­டுள்­ளது.

இவ்­வி­வ­கா­ரத்தில் நாம் தமிழ் தலை­வர்­களை குறை­கூற முடி­யாது. ஏனெனில் அவர்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்­களின் பிரச்­சி­னையை இனங்­கண்டு அதற்­கான தீர்­­வினை பெற்­றுக்­கொ­டுக்க முயற்சி செய்­துள்­ளனர். ஆனாலும் கண்டி மவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்சர் ஒருவர் அமைச்­ச­ர­வையில் இருக்­கின்றார். அவர் முஸ்லிம் சமூ­கத்தை பாது­காக்க உரு­வாக்­கப்­பட்ட கட்­சியின் தலை­வ­ரா­கவும் இருக்­கிறார். இவ்­வி­ட­யத்தில் அவர் எந்த அக்­கறையும் காட்­ட­வில்லை. அத்­தோடு கண்டி மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பாராளு மன்றம் சென்ற மற்றும் இரு முஸ்­லிம்கள் பிரதி அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றனர். அவர்­களும் இவ்­வி­ட­யத்தில் அக்­க­றை­கொள்­ள­வில்லை.

அமைச்சர் ஹக்கீம் ஐக்­கிய தேசிய கட்சி ஊடா­கவே கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வானார். பின்னர் முஸ்­லிம் மக்கள் வழங்­கிய ஆணைக்கு எதி­ராக செயற்­பட்ட ஹக்கீம் அர­சுடன் இணைந்து சமூ­கத்தை காட்­டிக்­கொ­டுத்தார். இந்­நி­லையில் இன்று கண்டி பல வகை­யிலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் அமைச்சர் ஹக்கீம் தனது தலை­மைப்­ப­த­வியை பாது­காப்­பதில் மட்­டுமே குறி­யா­க இருக்­கின்றார். அத்­தோடு பிர­தி­ய­மைச்சர் காதரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களின் மூலமே பாரா­ளு­மன்றம் சென்றார். இப்­போது அர­சுடன் இணைந்து பிர­தி­ய­மைச்­ச­ராக இருக்­கின்ற அவர், ஆசி­ரியர் பிரச்­சினை தொடர்பில் அக்­கறை காட்­டாது, தான் ஜனா­தி­ப­திக்கு விசு­வா­ச­மா­னவர் என்­பதை காட்ட அர­சுடன் இணைந்து ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்கு உத­வு­மாறு முஸ்­லிம்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கிறார். இதே­வேளை 2007 ஆம் ஆண்டு மலை­ய­கத்தில் 2500 ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்ட போது முஸ்­லிம்­க­ளுக்கும் ஆசி­ரியர் நிய­ம­னத்தை பெற்­றுக்­கொ­டுக்க உத­விய பைஸர் முஸ்­தபா மத்­திய கொழும்பு அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து கண்டி மக்­களின் வாக்­கு­களால் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­னதை மறந்­து­விட்டார்.

நிலைமை இப்­ப­டி­யி­ருக்­கின்­ற­போது இன்று முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக தொடர்ந்தும் போராட வேண்டியுள்ளது. மலையகம் சார்ந்த பிரதேசங்களிலுள்ள புத்திஜீவிகளும் கல்விமான்களும் தணவந்தர்களும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசர நிலையில் தாம் உள்ளோம் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham