புலமை பரிசில் பரீட்சை: ஸாஹிரா கல்லூரி மாணவி முதலாம் இடம்

Monday, September 29, 20140 comments


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகளின் படி, மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா, 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இது தொடர்பில் மாணவி கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தச் சந்தர்ப்பத்தில் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதுடன் என்னுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு துணை புரிந்த பாடசாiலை அதிபர் கே. எம். பௌமி, ஆரம்பப் பிரிவு ஆசிரியர் எம். இஸட். எம் ஐயூப், வகுப்பாசிரியர் எம். பீ. எம் பழீல் ஆகியோருக்கும் மற்றும் என்னுடைய பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

அத்துடன் என்னுடைய பெறுபேறுகளைக் கேட்டு யார் யாரோ சந்தோசம் அடைகின்றார்களோ அனைவருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடைய கல்வி முயற்சியை தொடர்ந்து சிறப்பாக முன்னெடுத்துச் செல்வேன் என்றார்.

அதிபர் எம்  பீ. எம். பழீல் கருத்துத் தெரிவிக்கையில்,

இம்முறை இந்த மாணவி 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த மாணவியுடைய வளர்ச்சியை தரம் 3 முதல் காணக் கூடியதாக இருந்தது. பாடசாலையில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெரும்பாலும் 100 புள்ளிகளையே அவர் பெறுவார்.

அது மாத்திரமல்ல ஏனைய தமிழ் தினப் போட்டிகளிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றுள்ளார்.

கல்வித்துறையில் முதன்மை பெற்று விளங்கும் எமது பாடசாலைக்கு இந்த மாணவியுடைய பெறுபேறு இந்தப் பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் இந்த சமயத்தில் இதற்காக பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham