முன்னாள் அமைச்சர் பாரூக்கின் முப்பெரும் விழா

Thursday, August 14, 20140 comments


முன்னாள் போக்­கு­வ­ரத்து இரா­ஜாங்க அமைச்­சரும் கேகாலை மாவட்­டத்தின் முத­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான யு.எல்.எம். பாரூக்கின் அர­சியல் வாழ்வின் 50 வருட நிறைவு விழாவும் பாரூக் மன்­றத்தின் 9 ஆவது வரு­டாந்த நிறைவு விழாவும் மற்றும் புத்­தக வெளி­யீடும் எதிர்­வரும் 20 ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு கொழும்பு பண்­டார நாயக்கா சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

யு.எல்.எம். பாரூக்கின் அர­சியல் வாழ்க்­கையை ஓய்வு பெற்ற அதிபர் கே. பிரே­ம­தாச 'யுக பெர­லி­யக துன் கோறள அபி­மான்ய' எனும் புத்­த­க­மாக எழு­தி­யுள்ளார். அன்­றைய தினம் இந்நூல் வெளி­யி­டப்­படவுள்­ளது.

நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக சபா­நா­யகர் சமல் ராஜ பக்ஷ கலந்து கொள்­ள­வுள்ளார். மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், அமைச்சர் மைத்­திரி பால சிறி சேன உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham