ஹக்கீமும் ரிஷாதும் ஊவா முஸ்லிம்களை ஆபத்தில் தள்ளிவிட்டார்கள் - அஸ்மின் அய்யூப்

Friday, August 29, 20140 comments


அமைச்­சர்­க­ளான ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் ஊவா மாகாண முஸ்­லிம்­களை மிகப் பெரும் ஆபத்தில் தள்­ளி­விட்­டி­ருக்­கின்­றனர் என வடக்கு மாகாண சபை உறுப்­பினர் அஸ்மின் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெ ளியிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாது,

இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டுகள் நில­வு­கின்­றன என்­பது புதிய விடயம் அல்ல. ஆனால் முஸ்லிம் – சிங்­கள இனங்­க­ளுக்­கி­டையில் வன்­மு­றையை நோக்கிக் கூர்­மை­ய­டையும் இன­மு­ரண்­பா­டுகள் வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு உச்ச அளவில் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றமை புதிய விட­யமே. இந்த சந்­தர்ப்­பத்தில் எல்­லா­வ­கை­யான உது்­தி­க­ளையும், சாணக்­கி­யங்­க­ளையும் கையாண்டு இன­மு­ரண்­பாட்டு நிலை­யினைத் தவிர்ப்­பது அனைத்து தரப்­பி­ன­ரதும் தலை­யாய கட­மை­யா­கவும் பொறுப்­பா­கவும் மாறி­யி­ருக்­கின்­றது. இந்த சூழ்­நி­லையில் இன­மு­ரண்­பா­டு­களைத் தவிர்ப்­ப­தற்கும் நல்­லி­ணக்­கத்தை சமூ­கங்­க­ளி­டையே மேம்­ப­டுத்­து­வ­தற்கும் அர­சியல் ரீதி­யான முயற்­சிகள் அத்­தி­யா­வ­சி­யப்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக ஆளும் தரப்­பி­ன­ரி­டையே அதி­க­ரித்துக் காணப்­படும் இன­மு­ரண்­பாட்டு நிலை­யினைத் தனிப்­ப­தற்கு அல்­லது அது தவ­றா­னது இந்த நாட்டு மக்­க­ளுக்கு அழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என்று உணர்த்­து­வ­தற்கு அர­சியல் தலை­வர்கள் முன்­வ­ர­வேண்டும்.

தற்­போ­தைய ஆளும் தரப்பின் அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா, ராஜித சேனா­ரத்ன போன்றோர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக வெளிப்­ப­டை­யாக செயற்­ப­டு­கின்ற சூழ்­நி­லையில் அத்­த­கை­ய­வர்­களைப் பலப்­ப­டுத்­தாமல், அவர்­க­ளோடு இணைந்து செயற்­ப­டாமல், ஆளும்­த­ரப்பில் இருந்­து­கொண்டு எல்­லா­வி­த­மான சலு­கை­க­ளையும் வச­தி­வாய்ப்­பு­க­ளையும் அனு­ப­வித்­துக்­கொண்டு ஆளும் கூட்­ட­ணியில் இருந்து வெளி­யேறி முஸ்­லிம்­களின் வாக்­கு­களை இலக்­கு­வைத்து தனி­யான கூட்­டணி அமைத்து தேர்­தலில் குதித்­தி­ருப்­பது ஊவா முஸ்­லிம்­களை ஒரு ஆபத்­திற்குள் தள்­ளி­விடும் கப­டத்­த­ன­மான செயற்­பா­டாகும்.

அத்­தோடு மிகச் சிறு­பான்மை சமூ­க­மாக வாழ்­கின்ற ஊவா முஸ்­லிம்­களை பெரும்­பான்மை அர­சியல் கட்­சி­களில் இருந்து தனி­மைப்­ப­டுத்தி, அவர்­களைக் காட்­டிக்­கொ­டுக்­கின்ற ஒரு கப­டத்­த­னத்­தையே இவர்கள் இரு­வரும் தற்­போது முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றார்கள். இந்த ஆபத்தில் இருந்து ஊவா முஸ்­லிம்­களை மீட்­க­வேண்­டிய பொறுப்பு இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்கு இருக்­கின்­றது. குறிப்­பாக முன்­மா­தீரி மிக்க, நல்­லாட்சி குறித்து சிந்­திக்­கின்ற, செய­லாற்­று­கின்ற நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் பொறுப்­பா­கவும் அமை­கின்­றது.

ஊவா மாகா­ண­ச­பையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­படும் அதே சந்­தர்ப்­பத்தில் ஊவாவில் இன­நல்­லு­றவு எவ்­வி­தத்திலும் பாதிப்­ப­டை­யக்­கூ­டாது.  பெரும்­பான்மை கட்­சி­களில் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் நிறுத்­தப்­பட்டு இன­நல்­லு­ற­விற்­கான உத்­த­ர­வாதம் எழுத்து மூலமும் செயற்­பா­டு­களின் மூலமும் உறுதி செய்­யப்­ப­டு­கின்ற அர­சியல் நட­வ­டிக்­கையே ஊவா­விற்கு அவ­சி­ய­மா­கின்­றது. மாறாக இன­வெ­றுப்பு பிரச்­சா­ரத்தை தூண்டும் வகை­யிலும், முஸ்­லிம்­களை ஊவாவில் இருக்­கின்ற ஏனைய இனங்கள் அந்­நி­ய­மாக நோக்கும் விதத்தில் தேர்தல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது எவ்­வ­கையில் சாணக்­கி­ய­மான, மிகப்­பொ­றுத்­த­மான முடி­வா­கவும், வழி­மு­றை­யா­கவும் அமையும் என்ற கேள்வி எழு­கின்­றது.

இது­வரை காலமும் கிழக்கு மாகா­ணத்­திலும், மேற்கு, வடமேல் மாகா­ணங்­க­ளிலும் முஸ்லிம் வாக்­கு­களைக் கொள்­ளை­ய­டித்து தம்­மு­டைய அர­சியல் விசு­வா­சத்தை ஆளும்­த­ரப்­பி­னர்க்குத் தாரை­வார்த்த தேர்­தல்­கால கொள்­ளை­யர்­க­ளிடம் இருந்து ஊவா மாகாண முஸ்­லிம்­களைப் பாது­காக்­க­வேண்­டி­யது எமது கடப்­பா­டாகும். என ஊவா மாகா­ண­சபைத் தேர்­தலில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் செயற்­பா­டுகள் குறித்து அண்மையில் நடைபெற்ற முன்னணியின் விஷேட தலைமைத்துவ சபை அமைர்வில் கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப்  தெரிவித்தார்கள்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham