எஸ்.என்.எம்.ஸுஹைல்
இந்நிலையில் கடந்த(08.17.) ஞாயிற்றுக் கிழமை கிழக்கிலிருந்து மற்றுமொரு பள்ளிவாசல் தொடர்பான செய்தி வெளிவந்தது. இது இலங்கை முஸ்லிம்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருகோணமலை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் பாதுகாப்பு தரப்பினரால் உடைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரான இம்ரான் மஹ்ரூப் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மறுதினம் திங்கட்கிழமை (18) கிழக்கு மாகாண முதலமைச்சர் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் முற்றிலும் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்திருந்தார். அதாவது, ''பள்ளிவாசல் இராணுவத்தினரால் தகர்க்கப்படவில்லை. கடந்த சில தினங்களாக பெய்த பெரும் மழையின் காரணமாகவும் கடும் காற்றின் காரணமாகவுமே பள்ளிவாசல் இடிந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். பள்ளிவாசலுக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் மூலம் அதனை உறுதிபடுத்தினேன்'' என்று அவர் தெரிவித்திருந்தார். எனினும் அக்கருத்து ஆராயப்பட வேண்டியதே. இருந்தாலும் இது பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருப்பினும் இவ்விவகாரம் அரசியலாக்கப்படுவது ஆரோக்கியமானதல்ல.
பள்ளிவாசலின் அமைவிடம்
மகாவெலி கங்கை சங்கமிக்கின்ற கொட்டியாரக்குடாவின் கரையோரக் கிராமங்களுள் கருமலையூற்று கிராமமும் ஒன்றாகும். இது ஒரு அழகிய வெள்ளை மணலைக் கொண்ட கடற்கரைக் கிராமமாகும். பார்ப்போரின் உள்ளத்தை வசீகரிக்கக்கூடிய மாபிள் பீச் என்ற கடற்கரையும் இக் கிரமத்தின் தொடர் கடற்கரையாகவே காணப்படுகின்றது.
வெள்ளை மணல் ஒருபுறம் அழகைக் கொடுக்க, மறுபுறம் 1836 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இந்திய சிற்பக் கலை நுட்பங்களோடு நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல். இதுமட்டுமல்ல, பள்ளிவாசலுக்கு அருகில் கற் பிளவொன்றிலிருந்து ஓயாது மிகவும் தெளிவான சுவையான தூய்மையான தண்ணீரைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நீர் ஊற்று.
இது இன்னும் அதிசய ஊற்றாகவே இருந்து கொண்டிருக்கிறது. பள்ளிவாசல் நீர்த்தடாக மண்டபத்துக்காக (ஹவ்ழ்) நீர் விநியோகத்தை இந்த நீர் ஊற்றே வழங்கி வருகின்றமை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.
இலங்கை முஸ்லிம்களின்
வரலாற்றுச் சின்னம்
இந்த பள்ளிவாசலுக்கு அருகில் நான்கு சியாரங்களும் காணப்படுகினறன. இதனை நாற்பது முழ சியாரம் என்று முன்னோர்கள் அழைக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு வகையிலும் முக்கியத்துவம்பெற்று திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் தொன்மையை எடுத்துக் காட்டும் ஒரு வரலாற்றுச் சின்னமாக விளங்கிய இப் பள்ளிவாசல் 2014 ஆகஸ்ட் 16 ஆம் திகதி இரவு அடையாளம் தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்துக்கு முன்பும்
யுத்த காலமும்
இப் பள்ளிவாசலைச் சுற்றி யுத்தகாலத்துக்கு முன்பும் யுத்த காலத்திலும் 110 முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இது கடற்கரையை அண்டிய பிரதேசம் என்பதால் பெரும்பாலும் இப்பிரதேச வாசிகள் மீன்பிடித்தொழிலையே தங்கள் ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வந்தனர்.
மீன் பிடிக்கச் செல்பவர்களும் இப் பள்ளியை இறைவணக்கத்துக்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
1985 ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமான காலப்பகுதியில் அந்த பள்ளிவாசலை அண்டியிருந்த சில குடியிருப்பாளர்கள் அப் பள்ளிவாசலில் இருந்து 200 மீற்றருக்கு அப்பால் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
கருமலையூற்று தக்கியா பள்ளிவாசல் உப தலைவர் முகம்மது சுபைர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
பள்ளிவாசல் பதிவு
மேலும் 1993.01.06 ஆம் திகதி நாட்டின் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் திருமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட நடமாடும் சேவையில் இப்பள்ளி நிர்வாகத்திற்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டார்.
கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்பு
உயர் பாதுகாப்பு வலயம்
அமீர் அலியின் பிரேரணை
மாவட்ட குழு கூட்டத்தில்
இதனை கருத்திற்கொண்ட பொருளாதார பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தொழுகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மக்களின் ஏக்கம்
யுத்த காலத்தில் பள்ளிவாசலில் தொழுது வந்த இவர்கள் சமாதான காலத்தில் அங்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. எனினும் கடந்த நான்கு வருடங்களாக கடலின் நடுவில் இருந்து நாளாந்தம் பள்ளியைப் பார்த்து ஒருவாறு உள்ளத்தை தேற்றியவர்களாக கரைக்கு வந்த இவர்களுக்கு இன்று அதுவும் இல்லாத சம்பவம் சொல்லலொனா துயரத்தில் அந்தக் கிராமத்தை ஆழ்ததி விட்டது
பள்ளியை காணவில்லை
இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இப் பள்ளிவாசலின் கூரையானது சீனக்குடா துறைமுகத்தை அண்டிய கடலின் நடுவில் இருந்து பார்ப்போர்களின் கண்களுக்கு அழகாகவும் முழுமையாகவும் தெரிவதுண்டு. ஆனால் 2014 ஆகஸ்ட் 17 ஆம் திகதி காலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாங்கள் கடலில் இருந்து குறித்த பள்ளிவாசலை பார்த்த போது அந்த பள்ளிவாசல் கண்களுக்கு தென்படாமல் இருந்ததையிட்டு நாம் அதிர்ச்சியடைந்தோம். கடலில் இருந்தவாறே, பள்ளிவாசல் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடைக்கப்பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டோம். இதனால் கவலையடைந்த நாங்கள் மீன்பிடியை இடை நடுவில் விட்டு விட்டு உடனடியாக கரையை நோக்கி வந்து ஏனைய மக்களிடம் தெரிவித்ததையடுத்தே பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது என்று உருக்கமாகத் தெரிவித்தனர்.
அரசியல் வாதிகளின்
விரைந்த செயற்பாடு
அன்றைய தினம் மதியம் விடிவெள்ளி யை தொடர்பு கொண்ட முன்னாள் அமைச்சர் மஹ்ரூபின் புதல்வரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இம்ரான் மஹ்ரூப் குறித்த பள்ளிவாசல் தகர்க்கப்பட்டுள்தாகவும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க மக்களுக்கும் அரசியல் தரப்பினருக்கும் மறுப்பு தெரிப்பதாகவும் கூறினார். அத்தோடு பள்ளிவாசல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் இவ்விடயத்தை பெறுப்பேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அமீர்அலி தெரிவித்திருந்தார்.
பள்ளிவாசல் தரைமட்டமாக்கப்பட்டதை அடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஆர்.அம்.அன்வர் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை மாலை கருமலையூற்று பிரதேசத்துக்குச் சென்று பிரதேசவாசிகளுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்பிரதேச பள்ளிவாசல் நிர்வாகிகளுடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடிய பின்னர் கிழக்கு மாகாண இராணுவ கட்டளையிடும் தளபதி அவர்களுடன் இரு அரசியல் பிரமுகர்களும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதன் பின்னர் திருகோணமலை மாவட்ட கட்டளையிடும் அதிகாரியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
இராணுவத்தினருடனான
கலந்துரையாடல்
அதற்கமைவாக வருகை தந்த கேர்ணல் குசல குணசேன தலைமையில் கரிமலையூற்று சுனாமி வீட்டுத்திட்ட பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பா.உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், பிரதேச அரசியல் பிரமுகர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் அப்பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதேச வாசிகள் பள்ளிவசலை நாங்கள் பார்க்க வேண்டும் என உள்ளே செல்ல முயற்சித்தனர். ஆனால் இது உயர் பாதுகாப்பு வலயம் எவரும் உள்ளே நுழைய முடியாது என படையினர் தடுத்துவிட்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த, பிளான்டன் பொயின்ட் இராணுவத் தளபதியும் இது உயர் பாதுகாப்பு வலயம் நாங்கள்கூட உள்ளே செல்வதென்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வேண்டும் எனக் கூறினார். இதனால் இந்தக் கூட்டம் எந்தப் பிரயோசனமும் இன்றி முடிவடைந்தது.
பொலிஸில் முறைப்பாடு
முதலமைச்சருக்கு மட்டும் அனுமதி
இதேவேளை, கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் முஸ்லிம்கள் முன்வைத்தக குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
மழையால் இடிந்து
விழுந்த பள்ளிவாசல்
அந்த செய்தி குறிப்பில், பாழடைந்த நிலையில் காணப்பட்ட பள்ளிவாசல் கட்டடம் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை காரணமாகவே இடிந்து விழுந்துள்ளதாக இராணுவத்தினால் விளக்கமளிக்கப்பட்டதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
மழைகாரணமாக குறித்த பள்ளிவாசல் இடிந்துவிழுவதற்கான வாய்ப்பு இருந்ததை தான் அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தர்.
மாகாண சபையில் சூடுபிடித்த
பள்ளிவாசல் விவகாரம்
கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அங்கு பலகட்சி உறுப்பினர்கள் சென்று பார்வையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பில், கிழக்கு மாகாண சபையில் காரசாரமான விவாதம் ஒன்று நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாகாண சபை உறுப்பினர் அன்வரால் இது தொடர்பான அவசர பிரேரணையொன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த விவாதத்தின் போது, உறுப்பினர்களால் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, பாதுகாப்புத் தரப்பின் அனுமதி பெற்று உண்மை நிலையை அறிய ஒரு வார காலத்திற்குள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்றை நேரில் அழைத்து செல்வதாக முதலமைச்சரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த விவாதத்தில் உரையாற்றிய ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களில் பலரும், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள பள்ளிவாசல் இராணுவத்தினாலே இடிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தும் வகையில் உரையாற்றினார்கள்.
இராணுவ அதிகாரியுடன் அந்த இடத்தை பார்வையிட சென்றிருந்த தன்னிடம் இயற்கை அனர்த்தம் காரணமாகவே அப்பள்ளிவாசல் இடிந்ததாக கூறப்பட்டது என, இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் கூறினார். எனினும் முதலமைச்சரின் பதில் சபையினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
புனரமைப்புச் செய்வதென்பதும் அவ்வாறு கூறுவதும் இலகுவான விடயம். ஆனால் ஒரு சமூகத்தின் பூர்வீகத்தையும் வரலாற்றையும் எக் காலமும் சான்று பகர்கின்ற கட்டடக்கலை அம்சங்கள் பொருந்திய முன்னர் இருந்த பள்ளிவாசலை உருவாக்க முடியுமா? 400 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வந்த இவ்வாறான தடயங்கள் அழிக்கப்படுவது அச் சமூகத்தின் எதர்கால சந்ததியினரின் இருப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும். இந்தக் கிராம வரலாற்றை மட்டுமன்றி திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் பூர்வீகத்தையே இந்தப் பள்ளிவாசல் பாதுகாத்து வந்தது.
பாதுகாக்க வேண்டியவர்களே இவ்வாறு நடந்து கொள்வது முஸ்லிம் சமூகத்தின் உள்ளத்தில் ஆறாத புண்ணை ஏற்படுத்தியிருக்கிறது.சமாதானத்தின் பின்னர் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் கலாசார அடையாளங்களும் வணக்கஸ்தலங்களும் அழிக்கப்படுவதுதானா ஆச்சரியமிக்க நாடு?

Post a Comment