நுவரெலியா நகர் பள்ளிவாசலின் மீது சுவர் வீழ்ந்ததில் இருவர் காயம்

Friday, August 29, 20140 comments


நுவ­ரெ­லியா ஜும்ஆ பள்­ளி­வா­ச­லின்­மீது மதில் சுவ­ரொன்று இடிந்து வீழ்ந்­ததில் இரண்டு பேர் படு­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி நுவ­ரெ­லியா பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­பவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நண்­பகல் இடம்­பெற்­றுள்­ள­தாக நுவ­ரெ­லியா பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த மதில் சுவர் இடிந்து வீழ்ந்­ததில் இப் பள்­ளி­வா­ச­லுக்­க­ருகில் இருந்த கடையின் ஒரு பகு­தியும் சேத­ம­டைந்­துள்­ளது.

காய­ம­டைந்­த­வர்­களில் ஒருவர் சேத­ம­டைந்த கடையில் தொழில் புரியும் ஊழியர் எனவும் மற்­றவர் பள்­ளி­வா­சலில் தொழில் புரிந்­து­கொண்­டி­ருந்­த­வ­ரெ­னவும் தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­பவ இடத்­திற்கு சென்ற நுவ­ரெ­வியா மாந­கர முதல்வர் மகிந்த தொட­கம்பே கமகே மற்றும் பள்ளி வாசலின் நிர்­வா­கிகள் நிலைமையினை பார்வையிட்டதுடன்  புனரமைப்பை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham