தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தால் ஏற்பட்ட விமர்சனமும் நிதர்சனமும்

Thursday, August 21, 20140 comments


-எம்.ஜே.பிஸ்ரின் முஹம்மத்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினால் கடந்த வாரம்  கொழும்பு மாளி­கா­வத்தை பிர­தே­சத்தில் நடத்தப்பட்ட ஆர்­பாட்­டத்தின் போது பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் ­செ­ய­லாளர் உட்­பட ஒரு குழு­வினர் அந்த இடத்­துக்கு வந்­தா­கவும் பொலிஸார் சுமு­க­மான முறையில் பேசி அவர்­களை திருப்­பி­ அனுப்­பி­ய­தா­கவும் அறிந்தோம்.

அந்த விடயம் தொடர்பில் பொது பல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்  ''என்ன நடக்­கின்­றது என்­பதை அவ­தா­னிக்­கவே  ஆர்ப்­பாட்டம் இடம்பெற்ற இடத்­துக்கு நாங்­கள சென்றோம். உலகில் யார் கொலை செய்­யப்­பட்­டாலும் அது கண்­டிக்­கத்­தக்க விடயம். ஏன் இந்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இஸ்­ரே­லுக்கு எதி­ராக மாத்­திரம் ஆர்ப்­பாட்டம் செய்­ய­வேண்டும்? ஈராக்கில் செயற்­படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­புக்கு எதி­ராக ஏன் இவர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­ய­வில்லை? இந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களே எதிர்க்கிறார்களே'' எனக் கேள்வியெழுப்பினார்.

ஞான­சார தேரரின் அந்­தக் ­க­ருத்­துக்கள் எனக்­குள்ளும் சில கேள்­வி­களை ஏற்­ப­டுத்­தி­யது. நாட்டில் உள்ள எல்லா முஸ்­லிம்­க­ளாலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அமைப்பா இந்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பு? இவர்­கள் தமது கருத்­துக்கள் செயற்­பா­டுகள் அனைத்தும் இலங்கை முஸ்­லிம்­களின் கருத்­தா­கவும் இலங்கை முஸ்­லிம்­களின் ஆர்­பாட்­ட­மா­க­வுமே அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றனர். இது எவ்­வா­றான  எதிர்­கால விளை­வு­களை ஏற்­ப­டுத்தும்? இவர்­க­ளது செயற்­பா­டுகள் இலங்கை முஸ்­லிம்­களின் செயற்­பா­டாக காட்­டப்­படும் போது அவை எதிர்­கால முஸ்­லிம்­களின் இருப்பில் எவ்­வாறு தாக்கம் ஏற்­ப­டுத்தும்?

ஒவ்­வொரு முஸ்­லிமும் சர்­வ­தேச முஸ்­லிம்­களின் ஒரு அங்கம் என்ற வகையில் காஸா மீதான மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்களுக்கு எதி­ராக எதிர்ப்புத் தெரி­விக்க வேண்­டிய தேவை கட்­டா­ய­மாக இருக்­கி­ன­றது.
ஆனாலும் கூட எமக்­கான பிரச்­சி­னை­களின் போது முற்­ப­டுத்­தப்­பட வேண்­டிய பிரச்­சி­னைகள் பற்றி சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. பிரச்­சி­னைகளைக் கையாளும்  முறை­களை பின்­பற்றி தூர­நோக்கு சிந்­த­னை­க­ளுடன் எமது ஒவ்­வொரு கட்ட நகர்­வு­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்­டி­யது காலத்தின் தேவை­யாக இருக்­கின்­றது. அந்த வகையில் இன்­றைய சூழ்­ நி­லையில் நீதி­மன்ற உத்­த­ர­வைத் ­தாண்டி இவர்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்டம் எவ்­வா­றான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும்?,

ஞான­சார தேரர் கூறி­யது போல  உலகில் யார் கொலை செய்­யப்­பட்­டாலும் அது கண்­டிக்­கத்­தக்க விடயம் ஏன் இந்த தவ்ஹீத் ஜமாஅத் இஸ்­ரே­லுக்கு எதி­ராக மாத்­திரம் ஆர்ப்­பாட்டம் செய்­ய­வேண்டும்? ஈராக்கில் செயற்­படும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்­புக்கு எதி­ராக ஏன் இவர்கள் ஆர்ப்­பாட்டம் செய்­ய­வில்லை?

அந்­தக் ­க­ருத்­திலும் ஒரு உண்மை நிலையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. உலகில் யார் தவறு செய்­தாலும் அவற்றை சுட்­டிக்­காட்டும் மனோ நிலை இருக்க வேண்டும்.

 இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பிர­தான உறுப்­பி­ன­ர்­களில் ஒருவர் ஆற்­றிய மிகவும் ஆக்­ரோ­ஷ­மான உரையில் ஐ.நா.வும் அமெ­ரிக்காவும் பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­வ­தா­கவும் இஸ்­ரேலை ஊட்­டி ­வ­ளர்ப்­ப­தா­கவும் கருத்து தெரி­வித்­தி­ருந்தார்.

யார் தவறு செய்­தாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்கும் அமைப்பாக தவ்ஹீத் ஜமாஅத் இருந்தால் 'போக்கோ ஹராம்' என்ற இஸ்­லா­மிய பெயர் தாங்­கிய அமைப்பு பாட­சாலை மாண­வி­யரை கடத்திச் சென்ற போது இவர்கள் எங்கே சென்­றார்கள்? 'இஸ்­லா­மிய ஸ்டேட்' என்ற குரலில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு அங்கு வாழும் சிறு­பான்மை சமூ­கத்தை மக்­களை சுட்டுக் கொன்ற போது, வெளி­யேற்­றி­ய­போது ஏன் அதை எதிர்த்து இவர்கள் குரல் கொடுக்­க­வில்லை? இஸ்­லா­மிய பெயர் ­தாங்கியவர்கள் அநி­யா­யம் இழைத்தால் அது நியாயம் ஆகி­வி­டுமா? எனவேதான் அதற்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும்.

காஸாவில் சுமார் ஒரு மாத காலமாக இஸ்­ரேல் மிலேச்­சத்­தனமான தாக்­கு­தலை முன்னெடுத்தபோது வீதியில் இறங்­காது கடந்த வாரம் வரை தவ்ஹீத் ஜமாஅத் காத்­தி­ருந்­த­மைக்­கான காரணம் என்­ன­வாக இருக்கும்?
இலங்­கையில் இன்றை சூழ்­நி­லையில் இப்­ப­டி­யான ஒரு ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யதன் தேவை என்ன?

குறித்த தவ்ஹீத் அமைப்பு இவ்­வாறு ஒரு ஆர்­பாட்­டத்தை நடத்தப் போவ­தாக ஊட­கங்­க­ளிடம் அறி­வித்­ததை அடுத்து பொது­ப­ல­சேனா அமைப்பு இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வாக ஒரு ஆர்ப்­பாட்­டத்தை செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­தி­ருந்­தனர்.

அத­னைத் ­தொ­ட­ர்ந்து ஆர்ப்­பாட்டம் இடம் பெறு­வ­தற்கு முன்­தினம் பொலிஸார் பொது­ப­ல­சேன, சிஹ­ல­ ராவய, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்­பு­களால் கோட்டை, புறக்­கோட்டை பிர­தே­சங்­களில்  நடாத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஆர்­பாட்­டங்கள் மற்றும் கூட்­டங்­க­ளை தடுக்க பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் பெற்றுக் கொண்­டனர்.

அத­னையும் தாண்­டியே மாளி­கா­வத்தை பிர­தே­சத்தில் இந்த அமைப்­பினர்  ஆர்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அதே நேரம் சிங்­கள கடும் போக்கு வாதி­களின் எரிந்து கொண்­டி­ருக்கும் இன­வா­தத்­துக்கு எண்­ணெ­யூற்றி அவர்­களை சீண்டி விடும் செயற்­பாட்­டையே இந்த அமைப்பு அன்­றைய தினம் செய்­தது.
ஆர்­பாட்­டத்தின் போது இவ்­வ­மைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் ஆற்­றிய உரையில் ''ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மல­ சலம் கழித்தால் அதனை பொது­ப­ல­சேனா அமைப்பு கழு­வுமா?, மாளி­கா­வத்தை காஸா என்றால் மயி­ரு ­பு­டுங்­கு­வீங்க,  ஒரு அளுத்­க­மையில் தப்­பித்­து­வி­ட்­டீர்கள'' போன்ற சொல்­லா­டல்­கள்­களும் நாகரிகமற்ற வார்த்தை பிர­யோ­கங்­களும் எதனை நோக்கி இவர்கள் மக்­களை கூட்டிச் செல்ல தயா­ரா­கின்­றனர் என்­பதை விளங்கிக் கொள்ள முடி­யு­மா­க­வுள்­ளது.

குறித்த அமைப்பு தமது அமைப்பை மாத்திரம் முன்­னி­றுத்தி எதனைச் செய்­தாலும் பர­வா­யில்லை. இவர்­க­ளுக்கு இலங்கை முஸ்­லிம்­களின் கருத்­துக்­க­ளாக தமது கடும்­போக்கு கருத்­துக்­களை சொல்லும் உரி­மையை யார் கொடுத்­தது?

இவர்கள் இலங்கை முஸ்­லிம்­களின் ஆன்­மீக தலை­மைத்­து­வமா? அல்லது அர­சியல் தலை­மையா? இவர்கள் இலங்கை முஸ்­லிம்­களின் குர­லாக தமது கருத்­துக்­களை எவ்­வாறு சொல்­ல­மு­டியும்? 

இந்த இன­வாத செயற்­பாடு தொடர்ந்தால் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இலங்கை முஸ்­லிம்கள் சிறந்த பாடத்தை புகட்­டு­வார்கள் என கோஷம் எழுப்­பி­ய­வர்கள். சில தினங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி காஸா­வுக்கு உத­வித்­தொகை வழங்­கு­மாறு உத்­த­ர­விட்­டமை தொடர்பில் நன்றி தெரி­வித்து போஸ்டர் ஒட்­டி­யுள்­ளமை எமக்குள் பல கேள்­விளை மேலேழச் செய்­கின்­றன.
அந்தப் போஸ்­டரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்றே ஜனா­தி­பதி ஒரு மில்­லியன் டொலர்­களை காஸா­வுக்கு உத­வி­யாக வழங்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக குறிப்பிடப்பட்டுள்ளது.  உண்மையில் இது நகைப்புக்கிடமான போஸ்டராகும். சமூக ஊடகங்களில் பலரும் இந்த போஸ்டர் விவகாரத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொழும்பில் மாத்திரமன்றி கிழக்கில் கூட இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இவர்­க­ளது கோரிக்­கையை ஏற்­றுதான் ஜனா­தி­பதி செயற்­ப­டு­கின்றார் என்­ப­தற்கு  தவ்ஹீத் ஜமாஅத்தினால் ஆதாரம் காட்ட முடியுமா?

இந்த ஆர்­பாட்­டங்­களின் போது குறித்த அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளான பெண்­களில் சிலர் காஸா  என்ற வாச­கங்­களை முகங்­களில் எழு­திய நிலையில் ஒலி­பெ­ருக்­கி­களை தாங்­கி­ய­வர்­க­ளாக கூக்­குரல் இட்­ட­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது. இது தொடர்பிலும் பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அன்றைய தினம் அவ்விடத்து வந்த பொது பல சேனாவோ அல்லது வேறு முஸ்லிம் விரோத கடும்போக்கு சக்­திகளோ வன்முறைகளைப் பிரயோகித்திருந்தால் அந்தப் பெண்­களின் நிலை என்­ன­வா­கி­யி­ருக்கும்? ஏனைய இலங்­கைவாழ் முஸ்லிம் பெண்­களின் எதிர்­கால இருப்பின் நிலை என்­ன­வாக மாறி­யி­ருக்கும்? 

வெறுமனே உணர்ச்சிவசப்படுவதை விடுத்து இலங்­கையில் சிறு­பான்மை சமூ­க­மாக வாழும் முஸ்­லிம்­களின் இன்­றைய நிலையையும் அண்­மைக்­கால சம்­ப­வங்களையும் கவ­னத்தில் எடுத்து மிகவும் அவ­தா­ன­மான முறை­யி­லேயே அனைத்து செயற்­பா­டு­க­ளையும் முஸ்­லிம்கள் முன்­ன­கர்த்த வேண்­டி­யுள்­ளது.

இவ்­வா­றான ஒரு சூழலில் தமிழ் சினி­மாப் ­பா­ணியில் ஹீரோ வில்­லனை பார்த்து கூக்­குரல் இடு­வது போல் செயற்­பட முற்­பட்டால் நிச்­சயம் பின்­வி­ளை­வு­களை முழு முஸ்லிம் சமூ­கமே எதிர் நோக்க வேண்டி ஏற்­படும்.
முஸ்லிம் சமூகம் சிறு­பான்­மை­யாக ஒரு ஆட்சியின் கீழ்­ வாழும் போது அவர்கள் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பதை இஸ்லாம் தெளி­வாக நமக்கு சொல்­லித் ­தந்­தி­ருக்­கின்­றது.

இவற்­றை­யெல்லாம் தாண்டி ஆக்­ரோஷ­மாக கதைத்து வீர­ வ­ச­னங்கள் பேசுவது தூர­நோக்­குப்­பார்வை கொண்ட ஒரு சமூ­கத்தின் செயற்­பா­டாக இருக்­காது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அண்­மைக் ­கால செயற்­பா­டுகள் பற்றி நோக்கும்போது எந்­த­ள­வுக்கு பொது­பல­ சேனா அமைப்பு சிலரால் திட்­ட­மி­டப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றதோ அதேபோல் இந்­த­ அமைப்பும் ஏதேனுமொரு சக்திகளால் திட்­ட­மி­டப்­பட்டே நகர்த்­தப்­ப­டு­கின்­றதா எனும் கேள்வி எழுகிறது.
எந்த வகை­யன திட்­ட­மி­டலின் கீழ் இந்த அமைப்பு தமது செயற்­பா­டுகள் முன்­னெ­டுத்­தாலும் அவற்றின் செயற்­பா­டுகள் இலங்­கைவாழ் முஸ்லிம் சமூ­கத்தின் மீது பாரிய தாக்­கங்­களை செலுத்தும் என்­பதில் எந்தவொரு சந்­தே­கமும் கிடை­யாது.



Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham