பள்ளிவாசலுக்கு 400 வருட வரலாறு கிடையாது : இராணுவம் மறுக்கிறது

Thursday, August 21, 20141comments


திரு­கோ­ண­மலை கரு­ம­லை­யூற்று இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­தியில் அமைந்­துள்ள முஸ்லிம் பள்­ளி­வாசல்  முற்­றாக தகர்க்­கப்­பட்­டது என்­பது பொய்­யான தகவல் எனவும் அந்த பள்­ளி­வா­சலில் புனர்­நிர்­மாணப் பணி­களே இடம் பெறு­வ­தா­கவும் இரா­ணுவ மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊட­க­மை­யத்தின் பணிப்­பா­ளரும் இரா­ணுவப் பேச்­சா­ள­ரு­மான பிரி­கே­டியர் ருவன் வணி­க­சூ­ரிய தெரி­வித்தார்.

குறித்த இரா­ணுவ முகா­முக்குள் பயன்­ப­டுத்­தப்­ப­டாத ஒரு பள்­ளி­வாசல் காணப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­த­துடன், சில ஊட­கங்­களில் இந்தப் பள்­ளி­வாசல் சுமார் 400 வருட வர­லாறு கொண்­டது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும் அதனை தான் மறுப்­ப­தா­கவும்  நேற்று ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது தெரி­வித்தார்.

 கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இலங்­கையில் ரொப்பட் நொக்ஸால் 1600 காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­பட்ட  ஆய்­வு­க­ளுக்கு அமைய குறிப்­பி­டப்­பட்­டுள்ள தர­வு­களின் அடிப்­ப­டையில் அக்­கா­லப்­ப­கு­தியில் இவ்­வா­றான ஒரு பள்­ளி­வாசல் காணப்­பட்­ட­மைக்­கான எந்­த­வொரு ஆதா­ரங்­களும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை எனவும் அந்த அடிப்­ப­டையில் இந்தப் பள்­ளி­வா­ச­லுக்கு 400 வருட வர­லாறு இல்லை எனவும் அவர் தெரி­வித்தார்.
இந்­தப்­பள்­ளி­வாசல் முழுமையாக உடைத்து அகற்றப்பட்டது என்ற விடயம் பொய்யானது எனவும் அந்த இடத்தில் புனர்நிர்மாணப்பணிகளே இடம் பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share this article :

+ comments + 1 comments

8/21/2014 6:23 PM

dsa

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham