கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலுக்கு செல்ல இரா­ணு­வத்­தி­ன­ரிடம் அனுமதி கோரி­யுள்ளேன் - முதலமைச்சர்

Friday, August 29, 20140 comments



கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலை மாகாண சபை உறுப்­பி­னர்கள் பார்­வை­யிடச் செல்­வ­தற்­கான அனு­ம­தி­யினை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கோரி­யுள்ள போதிலும் அதற்­கான அனு­மதி இன்னும் கிடைக்­க­வில்லை. அனு­மதி கிடைத்­த­ பின்பு மாகாண சபை உறுப்­பி­னர்­களை அழைத்துச் செல்­ல­வுள்ளேன் என கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரி­வித்தார்.

இதே­வேளை இன்­றைய தினம் மீண்டும் குறித்த பள்­ளி­வா­சலை தான் பார்­வை­யிட செல்­ல­வுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

கடந்த வாரம் இடம்­பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்­வின்­போது அவை உறுப்­பி­னர்கள் உடைக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­சலை பார்­வை­யிட செல்ல அனு­மதி கோரி­யி­ருந்­தனர். ஒரு வார காலத்­திற்குள் அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொ­வ­தாக முத­ல­மைச்சர் அதன் போது தெரி­வித்தார் . இது தொடர்பில் அவ­ரிடம் தொடர்­பு­கொண்டு கேட்­ட­போதே முத­ல­மைச்சர் மேற்­காண்­ட­வாறு தெரி­வித்தார்.

இவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில்,

பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வா­சலை இரா­ணு­வத்­தினர் நிர்­மா­ணித்து தரு­வ­தாக கூறி­யி­ருக்­கின்­றனர். இது முஸ்­லிம்­களின் வர­லாற்று அடை­யா­ள­மாகும். எனவே எமது பழ­மை­யான அடை­யா­ளங்­களை பாது­காக்க வேண்டும். அப்­பள்­ளி­வா­சலை அகற்ற அனு­ம­தி­ய­ளிக்க முடி­யாது.

நான் பள்­ளிவாசல் இடிக்­கப்­பட்­ட­தாக செய்தி வெ ளியான பின்பு ஸ்தலத்­துக்கு சென்று வந்தேன். அப்­போது இரா­ணு­வத்­தினர் இடிந்து விழுந்த பகு­தி­களை துப்­பு­ரவு செய்­தி­ருந்­தனர்.

கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். பாது­காப்பு அமைச்­ச­ரி­டமும் தெரி­வித்­தி­ருக்­கின்றேன். அவர் இரா­ணு­வத்­தினர் பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்து தருவர் என என்­னிடம் தெரி­வித்தார்.

இதே­வேளை கடந்த வாரம் மாகாண சபையில் பள்­ளி­வா­சலை நேரில் சென்று பார்­வை­யிட வேண்டும் என கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. குறித்த பள்­ளி­வாசல் அதிஉயர் பாது­காப்பு வல­யத்­திற்குள் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டிற்குள் இருக்­கின்­றது. எனவே மாகாண சபை உறுப்­பி­னர்­களின் கோரிக்­கைக்கு இணங்க குறித்த பள்­ளி­வா­சலை பார்­வை­யிட செல்ல அவர்­களின் அனுமதி பெற வேண்டியுள்ளது. ஆகவே இது தொடர்பில் இராணுவத்தினரிடம் அனுமதி கோரியுள்ளேன். எனினும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் மாகாண சபை உறுப்பினர்களை அங்கு அழைத்து செல்லவுள்ளேன் என்றார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham