முத­ல­மைச்சர் கருமலையூற்றுக்கு அழைத்து செல்லாது எல்லோரையும் ஏமாற்றுகிறார் - இம்ரான்

Friday, August 29, 20140 comments


முத­ல­மைச்சர் ஒரு வார காலத்­திற்குள் கிழக்கு மாகாண உபை உறுப்­பினர் குழு­வொன்றை கரு­ம­லையூற்று பள்­ளி­வா­ச­லுக்கு அழைத்துச் செல்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்தார். அவரின் வாக்­கு­று­திப்­படி ஒரு­வாரம் முடி­வ­டைந்­து­விட்­டது. எனினும் இன்­று ­வரை எவ­ரையும் குறித்த இடத்­துக்கு அழைத்­து­செல்­லாது அனை­வ­ரையும் முத­ல­மைச்சர்
ஏமாற்­றி­விட்­ட­தாக கிழக்­கு­மா­காண சபை ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்­தினார்.

இதே­வேளை முத­ல­மைச்சர் நஜீப் ஏ மஜீதின் அச­மந்­தப்­போக்­கா­னது ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­திற்கும் துரோக­மி­ழைப்­ப­தா­கவே அமைந்­தி­ருப்­ப­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இது­தொ­டர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்:

அர­சாங்­கத்­தினால் முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ராக மேற் கொள்­ளப்­பட்­டுள்ள மற்­று­மொரு அடா­வ­டித்­தனம் கரு­ம­லை­யூற்று புரா­தன பள்­ளி­வாயல் உடைப்­பாகும். இது தொடர்­பாக இம்­மாதம் 19 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் கார­சா­ர­மான விவா­தங்கள் இடம்­பெற்­றன. கிழக்கு மாகாண சபையின் உறுப்­பி­னர்­களை ஒரு வார காலத்­திற்குள் அழைத்துச் சென்று குறித்த பள்­ளியைக் காட்ட ஏற்­பாடு செய்­வ­தாக இதன் போது முத­ல­மைச்சர் வாக்­கு­றுதி அளித்தார்.
அவ­ரது வாக்­கு­று­திப்­படி ஒரு வாரம் முடிந்து விட்­டது. எனினும் அவர் சொன்­ன­படி எதையும் செய்­ய­வில்லை. சமூ­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக அவ்­வப்­போது பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­வது அவ­ரது வழ­மை­யாகும். இருந்த போதிலும் ஒரு கௌர­வ­மான சபையில் சமுக நலன் சார்ந்த விடயம் ஒன்றில் அவர் அளித்த வாக்­கு­று­தியை அவரே காற்­றிலே பறக்க விடு­வது என்­பது சமூ­கத்­திற்கு செய்­கின்ற பாரிய துரோ­க­மாகும்.

கிழக்கு மாகாண சபையில் 2012 இல் அவர் வாக்­கு­றுதி அளித்­த­படி கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­யலில் மக்கள் தொழுகை நடத்த ஏற்­பாடு செய்து கொடுத்­தி­ருந்தால் இன்று இந்­நிலை ஏற்­பட்­டி­ருக்­காது. அன்று முத­ல­மைச்சர் நஜீப் எப்­படி பொய் வாக்­கு­றுதி அளித்­தாரோ இன்றும் அதே பொய் வாக்­கு­று­தியை வழங்­கி­யுள்ளார்.

இது சமூக நலன் சார்ந்த விடயம். எதிர்­காலம் சம்­பந்­த­மா­னது என்ற எண்ணம் அவ­ருக்கு இல்லை. அவ­ருக்கு இருக்­கின்ற ஒரே­யொரு எண்ணம் முத­ல­மைச்சர் கதி­ரையை எப்­படிக் தக்க வைத்துக் கொள்­வது என்­பது மட்டும் தான். அதற்­காக எப்­ப­டி­யான பொய்யைச் சொல்­லவும் சமூ­கத்தை ஏமாற்­றவும் அவர் தயா­ராக இருக்­கின்றார்

கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்ட விட­யத்தை முதன் முத­லாக ஊட­கங்கள் ஊடாக நான் மக்கள் மயப்­ப­டுத்­தி­ய­போது அங்கு பள்­ளியே இருக்­க­வில்லை என கிழக்கு கட்­டளைத் தள­பதி ஊட­கங்­க­ளுக்கு கூறினார். ஆனால் இந்த விட­யத்தை மறைக்க முடி­யாது என்ற விடயம் பின்னர் தெளி­வா­னதும் மழைக்கு பள்ளி விழுந்­த­தாக கதை­ய­ளந்­தார்கள். இதற்கு முத­ல­மைச்­சரும் ஆமாம் போட்டு தலை­ய­சைத்தார்.

பள்­ளி­வாயல் இருந்த இடத்தில் இருக்கும் நீரூற்றைப் பயன்­ப­டுத்தி பாரிய ஹோட்டல் ஒன்று கட்­டு­வ­தற்­காக பள்­ளி­வாசல் உடைக்­கப்­பட்­ட­தாக சிலர் சந்­தேகம் தெரி­விக்­கின்­றனர். இதற்­காக மேல் மட்­டத்தைச் சேர்ந்த ஒருவர் அண்­மையில் இப்­ப­கு­திக்கு விஜயம் செய்­த­தா­கவும் பொது மக்கள் கூறு­கின்­றனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­களை அங்கு அழைத்துச் சென்றால் இந்த விடயம் அம்­ப­ல­மாகி விடும் என்­ப­தற்­காக எல்­லோ­ரையும் ஏமாற்றும் பொய் வாக்­கு­று­தியை முத­ல­மைச்சர் வாய் கூசாமல் வழங்­கு­கிறார்.
உடைத்த பள்­ளியை படை­யினர் மீளக் கட்­டு­வ­தாக இப்­போது கூறு­கி­றார்கள். சமூ­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக சொல்­லப்­ப­டு­கின்ற விடயம் இது­வென்­பதை முழு முஸ்லிம் சமூ­கமும் அறியும். வர­லாற்றுத் தொன்மை வாய்ந்த ஒரு பள்­ளியை அழித்து விட்டு அங்கு புதிய பள்­ளியை நிர்­மா­ணிப்­பது என்­பது வர­லாற்றுத் தட­யங்­களை அழிக்­கின்ற செயற்­பாடு என்­பதை கற்ற சமூ­கமும், இளைஞர் சமூ­கமும் நன்கு அறிந்து வைத்­துள்­ளது.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் கரு­ம­லையூற்று, புல்­மோட்டை, தோப்பூர், சம்பூர் என எல்லாப் பிர­தே­சங்­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு இன்று நெருக்­கடி ஏற்­ப­டுத்தப் படு­கின்­றது. எந்த விட­யத்­திற்கும் தீர்வு இல்லை. தீர்வைப் பெற்றுக் கொடுப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­பு­களை அர­சாங்­கத்தில் இருக்கும் எவரும் முன்­னெ­டுக்­க­வு­மில்லை. எனவே சமூகத்தின் எதிர்கால நலன் கருதி ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்ய முதலமைச்சர் முன்வர வேண்டும்.
இதற்கு பின்னர் இது போன்ற சம்பவங்கள் இடம் பெறாது என்பதை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் உறுதிப்படுத்த வேண்டும். இன்றேல் செய்யக் கூடிய ஒருவருக்கு இடம்விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இது தான் சமூகத்திற்கு செய்கின்ற பாரிய நன்மையாகும் என்று இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham