வரம்பு மீறும் பிக்குகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - ராஜிதவுடன் நேர்காணல்

Friday, August 29, 20140 comments


பொது பல சேனா அமைப்புடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பு தொடர்பில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன 'திவயின' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் தமிழாக்கம்.

தமிழில்: எம்.எம்.மின்ஹாஜ்

கேள்வி: பொது­ப­ல­சே­னா­விற்கும் உங்­க­ளுக்­கு­மி­டையே பிரச்­சினை மூண்­டுள்­ளதே? அதைப் பற்றி சற்று கூற­மு­டி­யுமா?

பதில்: - உண்­மையில் இது கருத்து வேறு­பாட்டு பிரச்­சினை. நான் ஒரு கொள்­கையின் அடிப்படையில் செயற்­ப­டு­பவன் என்­பது நாட்டில் அனை­வ­ருக்கும் தெரியும். நான் யாருக்­கா­கவும் என்­னு­டைய கொள்­கையை  மாற்றமாட்டேன்.
நாட்டில் உன்­ன­த­மான அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே ஏற்­பட்ட கருத்து வேறு­பாட்­டினால் ஏற்­பட்ட விப­ரீ­தத்தை உணர்ந்தே நான் இவ்­வாறு புரிந்­து­ணர்­வுடன் செயற்­ப­டு­கின்றேன்.

எனவே எத்­த­கைய கெடு­பி­டிகள் வந்­தாலும் நான் இந்த நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்­பதில் உறு­தி­யா­க­வுள்ளேன்.

கேள்வி:- இந்த பிரச்­சி­னைக்கு அளுத்­கம சம்­ப­வமே மூல­கா­ரணம்?

பதில்: - இந்த பிரச்­சி­னையின் போது பொது பல சேனாவுடன் நான் பேசச் செல்­ல­வில்லை. பௌத்த தர்­மத்தைப் பற்­றியே நான் பேசினேன்.
பௌத்த தர்­மத்­தி­னு­டைய கோட்­பா­டு­களின்படி இன மத பேதத்­திற்கு இட­மில்லை. மாறாக உலகில் மனி­தர்கள் அனை­வரும் ஒரு இனத்தை சேர்ந்­த­வர்கள். புத்த பெரு­மானும் கூட மனி­தர்கள் அனை­வரும் ஒரே இனம் என்றே போத­னையை வழங்­கி­யுள்ளார். இதற்­க­மைய பௌத்த தர்­மமே என்­னு­டைய வழி.  வேறு எவ­ரு­டைய வழி­மு­றை­களும் எனக்கு தேவை­யில்லை. ஏனென்றால் நாங்கள் அனை­வரும் மனித இனத்தைச் சேர்ந்­த­வர்கள்.

கேள்வி :- பொது­ப­ல ­சே­னா­வுடன் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுத்­து­வ­தினால் உங்களுக்கு அர­சியல் ரீதி­யாக பாதிப்புக்கள்  ஏற்­ப­டாதா?

பதில்: காவி­யு­டை­ய­ணிந்த சிறந்­த­ பிக்­குகள் காணப்­ப­டு­கின்­றனர். பௌத்த தர்­மத்­தின்­படி பிக்­கு­க­ளுக்கு உத­வி­ பு­ரி­வதும் அடி­ப­ணி­வதும் தெய்வ கட­மை­யாகும்.

கேள்வி: - பொது­ப­ல­சே­னா­விற்கு நோர்வே நாட்­டி­லி­ருந்து உத­விகள் கிடைப்­ப­தாக நீங்கள் குற்றம் சுமத்தி வரு­கின்­றீர்கள். இந்த குற்­றச்­சாட்­டிற்கு ஆதா­ரங்கள் உண்டா?

பதில்: - நான் இதனை ஏற்­க­னவே நிரூ­பித்துக் காட்­டி­விட்டேன். என்­னிடம் அதற்­கான சான்­றுகள் உள்­ளன.  என்­னு­டைய குற்­றச்­சாட்­டுக்­களை ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது பொது­ப­ல­சேனா ஒப்­புக்­கொண்­டது. அவர்­க­ளுக்கு அதனை ஒப்­புக்­கொள்­வதை தவிர வேறு வழி­யில்லை.

இருப்­பினும் ஞான­சார தேரர் எனக்கு சவால் விடுத்தார். இந்த சவால் எவ்­வித பிர­யோ­ச­னமும் அற்­றது. இதன்­போது என்­னி­ட­முள்ள ஆவ­ணங்­களை எடுத்துக் காட்­டினேன். இது ஒரு நபரின் மூல­மாக கிடைக்க பெற்­ற­தாகும். அந்த தக­வலின் படி நோர்வே செல்ல டிக்கட் வாங்­கிய விதம், அங்கே சென்று ஹோட்­டல்­களில் தங்­கி­யி­ருந்த விதம், புலம்­பெயர் தமி­ழர்கள் ஏழு பேருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது போன்ற அனைத்து ஆதா­ரங்­களும் உள்­ளன.
அது­மட்­டு­மன்றி இவர்­க­ளுக்கு இணை­யத்­த­ள­மொன்றை திறப்­ப­தற்கும் நோர்­வே­யி­லி­ருந்து தேவை­யான நிதி  உதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த இணை­யத்­திற்கு 'சி.த.மு' என்ற பெயரே வைக்­கப்­பட்­டது. அதா­வது சிங்­களம் தமிழ் முஸ்லிம் என்­ப­தாகும். இதில் தொடர்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வ­ரையே நிய­மித்­தனர்.

அதற்கு பின்பே இவர்கள் பொது­ப­ல­சே­னாவை உரு­வாக்­கினர். அதன்­ பின்பு நோர்வே தூத­ர­கத்தை சேர்ந்த ஒருவர் அந்த பிக்­கு­களை சந்­திக்க விரும்­பு­கின்­றீர்­களா என என்­னிடம் வின­வினார். இதற்கு முன்பு இவர்கள் கருத்து வேறு­பா­டுகள் கொண்­டிருந்­தமையே மூல­கா­ரணம்.

தேரர்­களை சந்­திக்க தயார் என்றே நான் கூறினேன். இதன்­போது ஞான­சார தேரர் என்னை வந்து சந்­தித்து ''அமைச்­சரே நாம் பழைய சம்­ப­வங்­களை மறந்து விடுவோம். நான் தற்­போது உங்­க­ளு­டைய கருத்­தையே கொண்­டுள்ளேன். அதா­வது அனைத்து இனத்­த­வர்­களும் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என்­ப­தே­யாகும்'' என்றார்.

அதற்கு ''நமக்­கி­டையே கருத்து வேறு­பா­டு­களே காணப்­ப­டு­கின்­ற­தே­யொ­ழிய தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் ஏதும் இல்­லையே, என்­னு­டைய கருத்தின் மீது உடன்­பட்டால் எவ்­வித பிரச்­சி­னை­களும் இல்லை'' என்று நான்  அவரிடம் கூறினேன்.

கேள்வி:- இது எந்த காலத்தில் நடந்­தது என்று கூற­மு­டி­யுமா?

பதில்:  - இது ஒரு வரு­டத்­திற்கு முன்பு இடம்­பெற்ற சம்­ப­வ­மாகும். அவர்கள் நோர்வே போய் வந்த பின்பேஇந்த சந்­திப்பு இடம்­பெற்­றது.

இதன்­போது தேசிய  ஒற்­றுமை தொடர்­பான மாநாடு ஒன்றை பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில்  நடத்த வேண்டும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதற்­கான முழு­மை­யாக தொகையை நான் பொறுப்­பேற்­கின்றேன். அத்­தோடு என்­னுடன் தொடர்பு கொண்­டுள்ள பிக்­கு­க­ளையும் இதற்கு பங்கு கொள்ள செய்ய முடியும் என்று நான் கூறினேன். இதன்­பின்பு இந்­த ­மு­டி­வுக்கு உடன்­பட்டு தேரர்கள் அங்­கி­ருந்து கலைந்து சென்­றனர்.

கேள்வி: - அந்த மாநாடு நடை­பெற்­றதா?

பதில் :- இல்லை. ஒரு மாதத்­திற்கு பின்பு அவர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­படத் தொடங்­கினார்.

 தேரர் ஒவ்­வொரு காலத்­திற்கு காலம் வெவ்­வேறு கருத்­துக்­களை கொண்டு செயற்­ப­டு­கின்றார். ஆரம்­பத்தில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட்டார். பின்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தற்­போது வரை செயற்­பட்டு வரு­கின்றார். அது மாத்­தி­ர­மின்றி யுத்த காலத்தில் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து யுத்­தத்­திற்கு எதி­ராக செயற்­பட்டு சில காலங்­களில் ஜெனரல் சரத் பொன்­சே­கா­விற்கு ஆத­ர­வாக செயற்­பட்டார். பின்னர் அர­சுடன் இணைந்து யுத்­தத்­திற்கு ஆத­ர­வாக செயற்­பட்டார். இந்­நி­லையில் இந்த தேரரின் நிலைப்­பா­டுகள் எனக்கு என்­ன­வென்று தெரி­ய­வில்லை.

கேள்வி: -தற்­போது ஞான­சார தேர­ரிடம் நஷ்டஈடு கோரி­யுள்ள நிலையில் இதற்கு ஒரு சதம் கூட வழங்கப் போவ­தில்­லை­யென அவர் கூறி­யுள்­ளதைப் பற்றி என்ன நினைக்­கின்­றீர்கள்?

பதில்:  அதனை தீர்­மா­னிப்­பது தேரர் அல்ல. நீதி­மன்­ற­மாகும். தேர­ருக்கு நீதி­மன்­றத்­திற்கு உள்ள அதி­காரம் இல்­லையே.

கேள்வி:- நீங்­களும் சில அமைச்­சர்­களும் சேர்ந்து கண்­டியில் மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்தீர்­களே... அதில் என்ன நடந்­தது?

பதில்:  நல்­ல­தொரு முடிவு கிடைத்தது. இதன்­போது மகாநாயக்க தேரர்கள் எமக்கு ஆசி­ர்வா­தமும் வழங்­கினர். நாங்கள் எதிர்­பார்த்­ததை விடவும் நல்ல நிலைப்­பாட்டில் மகா­நா­யக்க தேரர்கள் உள்­ளனர்.

இதே­வேளை பொது­ப­ல­சேனா அமைப்பின் பிக்­கு­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் கவ­லை­ய­டைந்­தனர். இதன்­போது மகாநாயக்க தேரர்கள் ''சாசன  சட்ட மூல­மொன்றை உரு­வாக்க வேண்டும். அதன் மூலமே தேரர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க அதி­காரம் கிடைக்கும். அந்த அதி­காரம் இல்­லா­மையே இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு காரணம். எனவே இந்த சாச­னத்தை நிறை­வேற்ற கூட்­ட­மைப்­பொன்றை உரு­வாக்க வேண்டும்'' என்று கோரி­னார்கள்.

இது தொடர்பில் அனைத்து கட்­சி­யையும் ஒன்­றி­ணைப்­ப­தாக நான் கூறினேன்.

கேள்வி:- அளுத்­கம சம்­ப­வத்தில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை எதிர்­பார்த்து நீங்கள் செயற்­பட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றதே?

பதில்:  - நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். களுத்­துறை மாவட்­டத்தில் 31 சத­வீதம் முஸ்­லிம்­க­ளும் 69 சத­வீ­த­ம­ளவில் சிங்­க­ள­வர்­களும் காணப்­ப­டு­கின்­றனர். நான் முட்டாள் அல்ல. சுமார் 40 வரு­டங்­க­ளாக அர­சி­யலில் ஈடு­ப­டு­கின்றேன்.

நான் எந்­த­வொரு தேர்­த­லிலும் தோல்­வி­ய­டை­ய­வில்லை. கடந்த மாகாண சபை தேர்தலின் போது களுத்துறையில் ஏனைய ஆசனங்களில் கட்சியின் வாக்கு குறைவடையும் போது எனது தொகுதியில் மாத்திரமே வாக்குகள் அதிகரித்திருந்தன.

அவற்றில் பேருவளையிலேயே முஸ்லிம்களின் வாக்குகள் எமக்கு கிடைக்கப் பெற்றன. அதனாலேயே முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் மாத்திரம் கிடைத்தது.

முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் முஸ்லிம்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்தது என்னுடைய தேசிய ஒற்றுமை கொள்கையினாலாகும்.
எனவே இவையெல்லாம் புத்தியில்லாதவர்களுக்கு புரியாது. நான் எதற்காகவும் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றமாட்டேன்.

நான் அனைத்து இனத்தவர்கள் தொடர்பிலும் குரல் கொடுத்துள்ளேன். எனவே என்னுடைய கொள்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாறாது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham