அந்த 14 பெண்களும் மசாஜ் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்றும் சட்டத்தரணி தெரிவித்தார்.
சட்டத்தரணி முறையிட்டதையடுத்து, நீதிமன்றிலிருந்த சிறைச்சாலை அதிகாரிகளை (பெண்) பார்த்த நீதவான், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான பெண்களின் ஆடைகளை களைந்து சோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று வினவினார்.
கடமையிலிருந்த இராணுவ அதிகாரிகளே, சந்தேகநபர்களான பெண்களின் ஆடைகளை களைந்து சோதனை செய்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் (பெண்கள்) தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் பிரசன்னமாயிருந்த பம்பலப்பிட்டி பொலிஸார், மசாஜ் நிறுவனம் என்ற போர்வையில் அங்கு விபசாரமே நடத்தப்பட்டதாக நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

Post a Comment