சிங்களத்தில்: நதீஷ் திக்கும்புர
தமிழில்: எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத்
''ஹாமினே.... ஹாமினே.... இனவாத எருமமாடு ஒன்று குழம்பிடுச்சி'' என்று கத்திக் கொண்டு கேய்ஹாமி வந்தார்.
''ஐயோ! சும்மா இருங்களேன் ஏதோ டைனோசர் ஒன்றுக்கு உயிர் வந்துட்டது போல இல்லையா கத்துறீங்க.... எருமமாடு ஒன்றால அவளோ பெரிய அழிவு ஏற்படுத்த முடியுமா?'' என்று ஹாமினி கேட்டாள்.
''நீ என்ன சொல்ற... டைனோசர் ஒன்ற விட மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் சக்தி இனவாத எருமமாட்டுக்கு இருக்கு'' என்று கேய்ஹாமி சொன்னார்
''இந்த இனவாத எருமமாடு ஒன்னும் சும்மா குழம்பி இருக்காது'' என்று ஹாமினி சொன்னது தான் தாமதம்...
''அந்த பல... இந்த பல... பொது பல எல்லாம் தடமாறிக் கொண்டிருந்தது இந்த இனவாத எருமமாட்டை குழப்பி விடத்தானே.... இப்போ வேலை சரி... இனவாத எருமமாடு அளுத்கமை பேருவளை பக்கத்த நாசப்படுத்தது''ன்னு கேய்ஹாமி சொன்னார்.
''அய்யோ! இந்தளவுக்கு நாசப்படுத்துர அந்த இனவாத எருமமாட்ட புடிச்சி மரத்துலகட்ட முடியாதாங்க... ஏன் அழிவு ஏற்படுத்துற வரைக்கும் அரசு பாத்துகிட்டு இருக்குது?'' என்றார் ஹாமினி.
''அதுதான் எனக்கும் குழப்பமா இருக்கு...... ஏன் அரசாங்கம் இந்த இனவாத எருமமாட்ட புடிச்சி மரத்துல கட்டுதில்ல? நாட்டை அழிவுக்குள்ளாக்குற இந்த எருமமாட்டை அரசு பாத்துக்கிட்டு இருக்குது?'' என்டாரு கேய்ஹாமி.
''என்னங்க இப்போ குழம்பி இருக்குற இந்த இனவாத எருமமாடு சிங்களமா, முஸ்லிமா, தமிழா?'' என்று கேட்டா ஹாமினி.
''இனவாதத்துக்குன்னு தனியா ஒரு இனம் இல்ல... எல்லா இனத்துலயும் இனவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்த பொதுவான ஒரு எருமமாடுதான் இருக்கு ஹாமினே''
''ஹாமினே உங்களுக்கு தெரியுமா? இந்த இனவாத எருமமாடு மக்கள முட்டிச்சினா என்ன நடக்கும்னு?''
கேட்டு வாய்மூட முதல் ஹாமினே சொன்னா
''என்ன நடக்கப்போகுது முட்டினா காயம் வரும் அவளவுதானே!''
''அப்படில்ல ஹாமினே காயத்தை ஏற்படுத்துவத விட இன்னொரு பெரிய விசயம் நடக்கும்...... ஒரு மனுசன இந்த இனவாத மாடு முட்டிச்சினா அவனும் எருமமாடா மாறி அவனும் முட்டி முட்டிப் போவான்....." என்று கேய்ஹாமினி சொன்னார்.
''ஆ.... அப்படியா? அப்படினா இது தொற்று நோய் போல பரவுமா?'' என்று ஆச்சரியத்தோடு ஹாமினே கோட்டாள்.
''இல்லாம... முட்ட முட்ட ஒவ்வொருத்தரும் இனவாத எருமமாடுகளா மாறிக் கொண்டே போவாங்க... இந்த இனவாத எருமைகள அரசாங்கம் ஒன்னும் பன்னலன்னா இந்த நாடு இனவாத எருமை மாடுகள் நிரம்பிய ஒரு நாடாக மாறிடும்...... கொறஞ்சது பகுத்தறிவு உள்ள மக்களாவது இத உணர்ந்து ஏதாவது செய்யல்லனா பேரழிவு ஒன்று தான் ஏற்படும்'' என்றார் கேய்ஹாமி.
''சரிங்க இந்த பேருவளை, அளுத்கமை பக்கம் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட காரணம் என்ன?'' என்று ஹாமினி கேட்டாள்.
''ஹாமுதுரு ஒருத்தர் வாகனத்தில் போகும் போது அந்த வாகனத்தின் ட்ரைவர் ரோட்ல இருந்த முஸ்லிம் பொடியன்மாருங்க கூட ஏதோ பிரச்சினை ஏற்படுத்திருக்கான்.....''
''சிலர் செல்ராங்க ஹாமுதுருவ அந்த முஸ்லிம் பொடியன்மார் அடிச்சதாக... சிலர் செல்றாங்க அப்படி நடக்கல்லனு.....''
''சரி.... ஹாமுதுருக்கு அடிச்சதாவே இருக்கட்டுமே..... அப்படி அடிச்சிருந்தா அடிச்சவங்கட தவறு அது, அப்போ அவங்களுக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்கனும். அது இல்லாம மீட்டிங் போட்டு, ஊர்வலம் பெய்த்து, முஸ்லிம் மக்கள அடிச்சி அவங்களோட சொத்துக்கள சேதப்படுத்துறது சரியா?'' என்றார் கெய்ஹாமி.
''அப்போ! சிங்களவர்கள அடிச்சி அவங்கட சொத்தெல்லாம் சேதப்படுத்தப்படல்லையாங்க'' என்று ஹாமினே கேட்டாள்.
''சட்டம் நீதி என்பவற்றுடன் தொடர்புபட்ட விடயங்களை இனத்துடன் தொடர்புபடுத்தி இனவாதத்தை மேலோங்க செய்தா அழிவைத்தவிற வேற எதுமே மிஞ்சப்போரதில்ல ஹாமினே......''
''சிங்கள, பௌத்தத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் அமைப்புகள் சிங்களவர்களுக்கு அசாதாரணம் நடப்பதாக சொல்றாங்க....
தமிழ், முஸ்லிம் பெயர் தாங்கிய அமைப்புகளும் சொல்கின்றன தமது இனத்துக்கு அசாதாரணம் நடப்பதாக....
அப்போ இதவெச்சி பார்த்தம்னா எந்த சமூகத்துக்கும் எதுவுமே நல்லது நடக்கல்லையே...... ''
''அப்படின்னா நாங்க எந்த சமூகத்துக்கும் சாதாரணமா நடக்காத இந்த அரசுக்கு எதிராக இல்லையா போராடனும்? அது இல்லாம ஏன் முஸ்லிம்களுக்கு அடிக்க வேண்டும்.....?''
''முஸ்லிம்களுக்கு அடித்து அவர்களது சொத்துக்களை நாசப்படுத்தினால் சிங்களவர்களுக்கு நல்லது நடந்துவிடுமா?
''எங்களப் போலவே அந்தந்த நேரத்துக்கு சாப்பிட்டுக் கொண்டு கஷ்டப்பட்டு வாழ்ற ஏழை முஸ்லிம்களுக்கு அடிச்சி நமக்கு என்ன கிடைக்கப் போகுதுன்னு எனக்குன்டா புரியல்ல ஹாமினே''
''பொதுவா நின்று போராட வேண்டிய நேரத்துல இனங்களா பிரிந்து அடித்துக் கொண்டா அது அரசாங்கத்துக்கு தான் இலாபம்....'' என்றார் கெய்ஹாமி.
''அப்போ இதுக்கு எல்லாம் அரசு உதவுதுண்டா நீங்க சொல்ல வாரிங்க?'' என்று ஹாமினே கேட்க,
''இந்த நேரத்துல அரசாங்கம் இனவாதத்தை தூண்டுற அமைப்புகளுக்கு தன்ட எதிர்ப்பக்காட்டணும்...... இப்படியான நேரத்துல அரசாங்கம் சட்டத்தை சரியா அமுல்படுத்தாம இருக்குதுண்டா இந்த இனவாத செயற்பாடுகளுக்கு அரசும் ஆதரவா இருக்குதுண்டு தான் நாங்க நினைக்க வேண்டியிருக்கு''
''இங்க பாருங்க ஹாமினே... கெம்பஸ் பிள்ளைகள் ஆர்பாட்டத்துல ஈடுபடக்கொள்ள நீதிமன்ற உத்தரவு எடுத்து அவற்றை நிறுத்துராங்க , கண்ணீர்ப்புகை அடிக்கிறாங்க, நீர் பீய்ச்சி அடிக்கிறாங்க...., தடியடிகூட செய்றாங்க.... ஏன் அப்போ அளுத்கமல மட்டும் நீர்த்தக்குதலுமில்ல, கண்ணீர்ப் புகையுமில்ல, நீதிமன்ற உத்தரவுமில்ல?'' என்று கெய்ஹாமி கேட்டார்.
''அப்போ நீங்க செல்லுற அளவுக்கு பெரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கா?''ன்னு ஹாமினே சென்னாள்
''சேதத்துண்ட அளவ மறைத்து சொல்ல முடியாது..... வீடுகள் தீவைக்கப்படும்போது, கடைகளுக்கு தீ வைக்கும் போது, இனத்தைப்பற்றி யோசிக்காது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்....... இந்தளவு பெரிய சேதம் இடம்பெறும் போது பிரபாகரனை அழித்த பாதுகாப்பு பிரிவு எங்கிருந்தது? என்ற கேள்விதான் எனக்குள் தோன்றுகின்றது.
சிலநேரம் வீடுகளுக்கு தீ வைக்கின்ற, கடைகளை உடைக்கின்றவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பார்த்துக் கொண்டிருந்தார்களோ தெரியாது?'' என்றார் கேய்ஹாமி.
''ஆமா.... ஆமா..... அப்படியும் இருக்கலாம்... இப்படி கடைகளை உடைக்கிற, வீடுகளுக்கு தீ வைக்கின்றவர்களுக்கு துப்பாக்கிச்சூடு நடாத்தி அதில் ஒருவர் இருவர் செத்துப் பெய்த்தாங்கன்னா? அப்புறம் சர்வதேசத்தில் இருந்து பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பிருக்குதே......
இந்த துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அழிவு ஏற்படுத்திய புலிகளை கொன்று யுத்தத்தை வெற்றி கொண்டதுக்கே சர்வதேச உலகம் விசாரணை செய்யனும் என்று சொல்லுறப்போ ஓரிரு கடைகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தவர்களை சுட்டால் இன்னும் என்ன என்ன விசாரணைகள் கேட்பார்களோ தெரியாதே?'' என ஹாமினே சொன்னார்.
''ஐயோ! ஐயோ! நான் சும்மா நக்கலுக்கு சொன்னத நீ உண்மைன்டே நினைச்சிட்டியா?'' என்று கெய்ஹாமி சொல்ல,
''என்ன நக்கல்..... புலிகள் செய்த அளவு பேருவளையிலோ, அளுத்கமையிலோ அழிவு ஏற்படவில்லையே..... இவ்வளவு பெரிய அழிவு ஏற்படுத்திய புலிகளுக்காகவே சர்வதேச உலகம் எழுந்து நிற்கும் போது இந்த வீடு உடைத்தவர்களுக்காகவும் கடைக்கு தீ வைத்தவர்களுக்காகவும் சர்வதேச உலகம் ஆதரவாக இருக்கும் என்பதுல இரண்டு கதையில்ல......''
''இந்தா இத நினைச்சு தான் பொலிஸாரும், இராணுவமும் வீடுகளை உடைச்சு கடைகளுக்கு தீ வைத்தவர்களுக்கு எதிராக ஒரு புஸ் வாணத்தையாவது வெடிக்கல்ல.....''
''இப்படி தாக்குதல் நடாத்துவதை வீடியோ எடுத்து செனல் 4 க்கு அனுப்பினால் மறுபடியும் இராணுவத்துக்கு எதிராக அவர்கள் ஒரு படம் எடுத்து விடுவார்கள்.....''
''இப்படி எமது பாதுகாப்பு பிரிவு தூரநோக்கோடு சிந்தித்துத்தான் கடை உடைக்கின்றவர்களுக்கு கடைககளை உடைத்து தீ வைக்கவும், வீடுகளை தீ வைக்கவும் விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள். இதனால் இப்போது சர்வதேச உலகத்தால எந்த அழுத்தமும் இல்லை தானே'' என்று ஹாமினி சொன்னார்.
''வாங்கடா பேருவளைக்கு போவம்.... அளுத்கமைக்கு போவம்..... சிங்களவர்கள் சிக்கித்தவிக்கிறார்கள். நாட்டுப்பற்றுள்ளவர்களே... வாருங்கள் போவோம்'' என்ற குரல் கேய்ஹாமிக்கு கேட்டது.
''யாரு இப்படி கத்திக் கொண்டுவார எருமை?'' என்று கேய்ஹாமி வாசலுக்கு வந்து பார்த்தார்.
பிங்ஹாமிதானே இது.... பெரியதோர் எருமமாடு ஆகியிருக்கிறது.
'' ஏய் பிங்ஹாமி... உனக்கும் இனவாத எருமமாடு தாக்கிவிட்டதா?'' என்று கேய்ஹாமி கேட்டார்.
பிங்ஹாமி வேகமாக வந்து கெய்ஹாமியை முட்டினான். ஆனாலும் கேய்ஹாமி இனவாத எருமையாக மாறவில்லை.
''ஏன் நீ இனவாத எருமையாக மாறவில்லை.... நீ இனவாத எருமையாக மாறு'' என்று வாலைத்தூக்கி எருமை சாணத்தைப் போட்டது.
ஆயிரம் இனவாத எருமைகள் வந்து என்னை முட்டினாலும் நான் இனவாத எருமையாக மாறப்போவதில்லை என்று கேய்ஹாமி கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
நன்றி:அத

Post a Comment