அளுத்­கம: இரா­ணு­வத்­தி­னரின் மீள்கட்­டு­மான பணிக்கு தடை விதிப்பு

Friday, July 4, 20140 comments


அளுத்­கம மற்றும் பேரு­வளை பொலிஸ் பிரி­வு­களில் அண்­மையில் ஏற்­பட்ட வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்ட சில பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் மீள்கட்­டு­மான பணிக்கு களுத்­துறை நீதிவான் நீதி­மன்றம் நேற்று இடைக்­கால தடையை விதித்­துள்ளது.
அத்­துடன் குறித்த வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த இரு­வரின் பிரேத பரி­சோ­த­னை­களை முன்னெ­டுத்த சட்ட வைத்­திய அதி­கா­ரிக்கும் நீதவான் அழைப்­பாணை பிறப்­பித்­துள்ளார்.

குறித்த வன்­மு­றையின் போது உயி­ரி­ழந்த இருவர் தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று களுத்­துறை மேல­திக நீதவான் ஆய்ஷா ஆப்தீன் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே இந்த தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணை­களின் போது உயி­ரிழ்ந்த இரு நபர்­களின் சார்­பிலும் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு மேல­க­தி­க­மாக சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலவர் உபுல் ஜய­சூ­ரிய தல­மை­யி­லான விஷேட சட்­டத்­த­ர­ணிகள் குழு மன்ரில் ஆஜ­ரா­னது.

இதில் சட்­டத்­த­ரணி உபுல் ஜய­சூ­ரி­ய­வுக்கு மேல­தி­க­மாக சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் செய­லாளர் அஜித் பத்­தி­ரன சட்­டத்­த­ரணி பந்­துல வீர­சிங்க உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இதன் போது மன்­றுக்கு விஷேட வேண்­டுகோள் ஒன்றை முன்­வைத்த சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலவர் உபுல் ஜய­சூ­ரிய உள்­ளிட்ட குழு­வினர் கடந்த மாதம் 15ம் திகதி அளுத்­கம மற்றும் பேரு­வளை பொலிஸ் பிரி­வு­களில் இடம்­பெற்ற வன்­மு­றை­களின் போது இருவர் உயி­ரி­ழந்தும் 120 ற்கும் மேற்­பட்ட வீடுகள் சேதப்படுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அரச இர­சா­யன பகுப்­பாய்வுப் பிரி­வினர் அங்கு சென்று பரி­சோத­னை­களை மேற்­கொள்­ள­வில்லை என சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­விட  குறித்த வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்­த­வர்­களில் ஒருவர் கத்திக்குத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­துள்­ள­தக சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது. அதனால் குறித்த இரு ஜனா­ஸாக்­க­ளையும் மீண்டும் தோண்டி எடுத்து பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள உத்­த­ர­விட வேண்டும்.

அத்­துடன் இவ்­விரு இளை­ஞர்­களும் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­கிய இடம் மட்­டு­மல்­லாது எரிக்­கப்­பட்ட வீடுகள் மற்றும் கடை­களில் அரச இர­சா­யன பகுப்­பாய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அதனால் அந்த இடங்­களில் உட­ன­டி­யாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வு­க­ளுக்கு உடன் உத்­த­ரவு பிறப்­பிப்­ப­துடன், அந்த இடங்­களில் மட்டும் தற்­போ­தைக்கு இரா­ணு­வத்­தி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள மீள் கட்­டு­மான நட­வ­டிக்­கை­களுக்கு தற்­கா­லி­க­மான தடை உத்­த­ர­வொன்றை பிறப்­பிக்க வேண்டும் என சட்டத்தர­ணிகள் சங்­கத்­தி­னரால் மன்றில் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

இதனை அடுத்து முன்­வைக்­கப்­பட்ட வாதங்­களை ஆராய்ந்த நீதிவான் ஆய்ஷா ஆப்தீன், அரச இர­சா­யன பகுப்­பாய்வு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும் வரை துப்­பாக்கிச் சூடு இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் இடம், தீயினால் சேத­ம­டைந்த கடைகள் மற்றும் வீடு­களில் மீள் கட்­டு­மான நட­வ­டிக்­கை­களை தொடர இரா­ணு­வத்­தி­ன­ருக்கு தற்­கா­லிக தடை உத்­த­ரவை பிறப்­பித்தார்.

அத்­துடன் எதிர்­வரும் 31ம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைத்த நீதிவான் அன்­றைய தினம் அரச இர­சாயன பகுப்­பாய்வு அறிக்­கையை மன்றில் சமர்­பிக்­கு­மறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் வன்­மு­றை­களில் உயி­ரி­ழந்த மொஹம்மட் ஸஹ்ரான் மற்றும் மொஹம்மட் சிராஸ் ஆகியோரின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரியையும் அன்றைய தினம் மன்ரில் ஆஜராகுமாறு நீதிவான் அழைப்பாணை பிறப்பித்தார்.

நேற்றைய வழக்கு விசாரணைகளில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பத்தினர் சார்பில் சட்டத்தரணிகளான ஹஸ்ஸாலி ஹுசைன்,எம்.சால்மான், சப்ராஸ் ஹம்சா, ரமீஸ் பசீர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham