பதுளையில் முஸ்லிம் சிறுவனுக்கு நடந்தது என்ன?

Monday, June 9, 20140 comments



பது­ளையில் கடந்த 28 ஆம் திகதி நடை­பெற்ற பொது பல சேனாவின் ஊர்­வ­லத்தின் போது, பதுளை ரொக்ஹில் எனும் இடத்தை சேர்ந்த முஹ­மது அஸாம் எனும்  முஸ்லிம் சிறுவன் தாக்கப்பட்­டது குறித்து பல செய்திகள் இணை­யத்­திலும் ஊட­கங்­க­ளிலும் பரப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான உண்மை நிலையை அறியும் நோக்கில்  குறித்த மாண­வனை நேரில் சந்தித்தோம்.

குறித்த மாணவன் மற்றும் அவனது பெற்றோருடனான உரையாடலை விடிவெள்ளி வாசகர்களுக்காக தருகிறோம்.

 ஏ.எம்.எம். முஸம்மில், பதுளை.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் ?
- எனது பெயர் முஹ­மது அஸாம். நான் ப/ அல் அதான் ம.வி.யில் தரம் பத்தில் கல்வி கற்­கின்றேன். கடந்த ஒரு வார கால­மாக ஒரு தேயிலை கடையில் பகு­தி­நே­ர­மாக வேலைக்கு சேர்ந்­துள்ளேன்.

 அன்­றைய தினம் என்ன நடந்­தது என்று சொல்­லுங்கள்?
 அன்று நான் கடையில் வேலை செய்­து­கொண்­டி­ருந்தபோது அசர் தொழு­கைக்கு பாங்கு சொன்­ன­வுடன் தொழு­வ­தற்­காக பள்­ளிக்கு சென்றேன். நான் கடை­யி­லி­ருந்து  பெற்றோல் நிலையத்தை தாண்டி போகும் போது, ஒரு கூட்டம்  நீண்ட பேனர் ஒன்றை பிடித்­துக்­கொண்டு பஸ் நிலையம் பக்கம் வந்து கொண்­டி­ருந்­தார்கள். நான் அவர்­களை தாண்டித் தான் பள்­ளிக்கு போக வேண்டி இருந்­தது.

அப்­போது அங்­கி­ருந்து நான் இருந்த பக்கம் ஒருவர் வந்து எனது தலை­யி­லுள்ள  தொப்­பியை கழட்டு என்று சிங்­க­ளத்தில் சொல்லி எனது தலையில் அறைந்தார்.  நான் தொப்பியை கழற்றி எனது காற்­சட்டை பைக்குள் போட்­டு­கொண்டு அவர்­களை கடந்து செல்ல முயன்ற போது இன்னும் சிலர் வந்து எனது கையைப் பிடித்துக் கொண்டு எனது வாப்­பாவின் பெய­ரையும்  உம்­மாவின் பெய­ரையும் கேட்­டார்கள். நான் பதில் சொன்ன போது பின்னால் எனது முதுகில் ஒருவர் குத்­தினார். அப்­போது இன்னும் ஒருவர் எனது கன்­னத்தில் அடித்தார்.

 உங்­களை அடிக்­கும்­போது யாரும் உங்­களை காப்­பாற்ற வில்­லையா ?
 அப்­போது எனது மாமாவின் கூட்­டா­ளி­யான “சந்தா ” என்­பவர் என்னை அடிக்க விடாமல் காப்­பாற்றி பக்­கத்­துக்கு அழைத்து சென்றார். அவர் என்னை அழைத்துச் செல்லும் போது பின்­பக்­கத்தில் இருந்த ஒருவர் எனது தலையில் அடித்தார். என்னை இந்த இடத்­திற்கு அனுப்­பி­யது ஒரு “தம்­பி­யனா” என்று கேட்டு மீண்டும் அடிக்க வந்தார். அப்­போது சந்தா எனும் எனது மாமாவின் கூட்­டாளி என்னை அடிக்க விடாமல் என்னை கட்­டி­ப்பி­டித்து  பாதுகாத்தார். அப்­போது இன்னும் சிலர் என்­னி­டத்தில்  கமரா உள்­ளதா என்று எனது காற்­சட்டை பையில் கைபோட்டு தேடி பார்த்­தார்கள். அப்­போது எனது உம்­மாவின் “போன்” எனது பொக்­கட்டில் இருந்தது. அதை எடுத்து பார்த்­தார்கள். பிறகு அந்த போனில் கமரா இல்லை இதனால் வீடியோ பண்ண முடி­யாது என்று கூறி இன்­னொ­ரு­வ­ரிடம் போனை கொடுத்தார்.

 நீங்கள் வழ­மை­யாக போன் பாவிப்­பீர்­களா?

இல்லை. உம்­மாவின் போன் சிம் காணாமல் போனதால் புதிய சிம் கார்ட் ஒன்றை போட்­டு­வ­ரு­மாறு உம்மா சொன்­னதால் அன்று உம்­மாவின் போனை எடுத்துக் கொண்டு சென்றேன்.
 பிறகு என்ன நடந்­தது?

 போனை இன்­னொ­ரு­வ­ரிடம் கொடுக்கும் போது அங்­கி­ருந்த போலிஸ் அங்கிள் ஒருவர் வந்து அந்த போனை எடுத்து பார்த்து அதில் வீடியோ பண்ண முடி­யாது என்று கூறி போனை என்­னிடம் தந்து என்­னையும் கூட்­டிக்­கொண்டு போலிஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு போனார்கள் . பிறகு எனக்கு குடிக்க ஏதும் வாங்­கித்­த­ரவா என்று கேட்­டார்கள். நான் வேண்டாம் என்று கூறி என்னை இறக்கி விடு­மாறு கூறினேன். என்னை போலிஸ் ஜீப்­பி­லி­ருந்து இறக்கும் போது சந்தா என்­பவர் மீண்டும் வந்து  எனது மாமாவின் கடையில் என்னைச் சேர்த்­து­விட்டு சென்றார்.

குறித்த மாணவன் முஹம்மத் அசாமின் தாய் சித்தி பாயிஸா அவர்­க­ளிடம் இச்­சம்­பவம் பற்றி கேட்ட போது,

 “ நாங்கள் அன்­றாடம் உழைத்து சாப்­பிடும் ஏழைகள் தொர, இந்த வீடு ( இரு அறைகள் ) கூட சில வரு­டங்­க­ளுக்கு முன் பதுளை வை.எம்.எம்.ஏ நிறு­வ­னத்தால் கட்­டித்­தரப்பட்­டது.

எனது கணவர் கிட்னி ஆப­ரேஷன் பண்ணப்பட்டு கடினமான வேலை­கள் செய்ய முடி­யாத நிலையில் உள்ளார். அவர் “அலு­மி­னியம் பிட்டிங்க்ஸ்” வேலை தான் செய்­தாரு. இப்­போது அவரால் பெரி­தாக உழைக்க முடி­ய­ததால் மகனை நான் ஒரு தேயிலை கடையில் பகு­தி ­நே­ர­மாக வேலைக்கு சேர்த்­துள்ளேன். பாட­சாலை முடிந்­ததும் அவர் அங்கு வேலைக்கு செல்வார். அவன் மிகவும் அமை­தி­யானவன். தொழுகை இபா­தத்­களில் ஈடு­பா­டுள்­ளவன். வேலைக்கு சேர்ந்து இப்­போது நான்கு ஐந்து நாட்கள் தான் ஆகின்­றன. அதற்­கி­டையில் தான்  அவ­னுக்கு இப்­படி ஆகி­விட்­டது.

எனது மகன் எப்­போதும் மார்க்கத்தில் ஈடு­பாடு உள்­ளவன் . அவன் எப்­போதும் தலையில் தொப்­பி­யுடன் தான் இருப்பான். இரவு படுக்­கைக்கு செல்லும் போதும் தொப்­பியை பக்­கத்தில் கழட்டி வைத்­து­விட்­டுத்தான் படுப்பான். விடிய எழும்பும் போது அதை அணிந்­து­கொண்­டுதான் வெளியில் வருவான். அன்­றைய தினமும் தலையில் தொப்­பி­யுடன் தான் அந்த இடத்தல் சென்­றுள்ளான். அதனால் தான் அவன் அடி­வாங்க நேர்ந்­தது. அதே­நேரம் அந்த கூட்­டத்தில் இருந்த எனது மரு­ம­கனின் சிங்­கள நண்பன் ஒரு­வ­னா­லேயே எனது மகன் பாது­காக்கப்பட்டு அழைத்து வரப்பட்­டுள்ளான் .

இந்த  நிகழ்ச்­சி­யெல்லாம்  முடிந்த பிறகு நான் மகனைப் பார்க்க வந்த போது அவ­னது கன்னம் வீங்கி முகம் சிவந்து காணப்பட்­டது. என் உள்ளம் பதை­ப­தைத்து அழுது விட்டேன். பிறகு அவனை  கூட்­டிக்­கொண்டு கொண்டு வரும் போது இன்­னு­மொரு சிங்­களப் பெரி­யவர் எனது மகனை கண்டு அருகில் வந்து, எனது மகனின் தலையை தடவி அழுதுவிட்டார். அப்­போது அவர் சொன்னார்,  “ மிரு­கங்­களைப் போல் இந்த சிறு­வனை அடித்­தார்கள். அந்த வேளையில் என்னால் ஒன்­றுமே செய்ய முடி­யாது போய்­விட்­டது.  இந்த நாட்­டிற்கு என்ன நடந்து விட்­டதோ தெரி­யாது மகள்”. என்று கூறி கவ­லை­யுடன் சென்றார்.
 நான் மகனை கூடிக்­கொண்டு வரும் போது எனது மகனை அடித்த ஒரு­வனை எனக்கு அடை­யாளம் காட்­டினான். அவன் ஒரு ஆட்டோ ஓட்டுனர்.

நாங்கள் ஏழைகள், ஆனால் யாருக்கும் எந்த இடைஞ்­சலும் இன்றி எங்கள் பாட்டில் வாழும் முஸ்­லிம்கள். எங்­க­ளது சமய கலா­சாரப் படி வாழ எங்­க­ளுக்கு முடி­யாதா? அர­சாங்கம் இந்த விட­யங்­களை கவ­னித்து நல்­ல­தொரு முடிவை எடுக்க வேண்டும்.” என்று கூறினார்.

அஸாமின் தந்தை அப்துல் காதர் அவர்­க­ளிடம் இச்­சம்­பவம் பற்றிக் கேட்ட போது,

“நான் இதைப்­பற்றி கேள்விப்பட்ட போது வெலி­ம­டையில் இருந்தேன். எனது மகனை போட்டு அடிக்­கின்­றார்கள் என்று எனக்கு செய்தி கிடைத்­த­வுடன் அவ­ச­ர­மாக வந்தேன்.

இந்த சம்­ப­வத்தில் எனது மகனை காப்­பாற்றி அழைத்து வந்­த­வரும் ஒரு சிங்­கள சகோ­தரன் தான். அதேவேளை இந்த கூட்­டத்தை நடத்­திய தயா­சிறி,         “ பொது பல சேனா என்­பது ஒரு இன­வாத அமைப்போ பயங்­கரவாத அமைப்போ இல்லை என்று கூட்­டத்தில் பேசிக்­கொண்டு இருக்கும் போதே அவ­ரது பின் புறத்தில் எனது மகன் தாக்கப்படு­கின்றான். இவன் ஒரு சிறுவன் என்றும் பார்க்­காமல் அடிக்கும் போது எனது மனம் பட்ட வேத­னையை அந்த அல்லாஹ் ஒருவன் தான் அறிவான்.

நான் இவர்­க­ளிடம் கேட்­பது தயவு செய்து இன­வா­தத்தை கைவிட்டு இவ்­வ­ளவு காலம் நாம் ஒற்றுமையாக வாழ்ந்தது போல் இனிமேலும் வாழ்வோம். அடிபட்ட எனது மகன் ஒரு சிறுவன். அவன் முஸ்லிமான ஒரே காரணத்தால் அடிவாங்கியது அவனுடைய ஆழ்மனதில் பதிந்து விட்டது. அவன் உயிரோடு வாழும் காலமெல்லாம் அதை அவன் மறக்க மாட்டான். இது ஒரு மோசமான நிலையாகும்.” என்றும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் போது ஒரு சிலர் குறித்த சிறுவனை தாக்கியது உண்மைதான். அதேநேரம் அதேகூட்டத்தில் நின்றிருந்த சிலர்தான் இச் சிறுவனைக் காப்பாற்றி பாதுகாப்பாக அழைத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்திருக்கிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் சமயங்களில் நம்மவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு சமயோசிதமாக நடந்து கொள்வது சிறந்ததாகும். இன்றேல் பிரச்சினைகளை உண்டாக்க விரும்பும் சில தீய சக்திகள் இவ்வாறான தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவித்து இனங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி குளிர்காய முனையக் கூடும்.

அல்லாஹ் அவ்வாறான தருணங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பானாக.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham