பொதுபல சேனா மீது முறைப்பாடின்றி சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது - பொலிஸ் மா அதிபர்

Friday, June 20, 20140 comments


அளுத்­கம, தர்கா நகர் மற்றும் பேரு­வளை பிர­தே­சங்­களில் கடந்த 15  ஆம் திகதி இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள்  தொடர்பில் இது­வரை 55 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில்  35 பேர்  நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு  விளக்கமறி­யலில்  வைக்­கப்­பட்­டுள்­ளனர். எஞ்­சி­ய­வர்கள்  தொடர்ந்தும்  விசா­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றனர் என்று பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­கக்கோன் தெரி­வித்தார்.

கொழும்பில் இன்று வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கை யின் பின்னர்  கல­கங்­களில் ஈடு­படும் நோக்கில் பதிவு செய்யப்­ப­டாத  சில அமைப்புக்கள் குறுந்த­க­வல்கள் மற்றும் பேஸ்புக் மூலம் பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றன. பொதுமக்கள்  அவற்­றுக்கு ஏமாந்­து­வி­ட­வேண்டாம் கொழும்பில்
தேவை­யான பாது­காப்பு ஏற்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன என்றும்  பொலிஸ்மா அதிபர் குறிப்­பிட்டார். ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தலை­மையில் அமைச்சில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட பொலிஸ்மா அதிபர்  இலங்­கக்கோன்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அஜித் ரோஹ­னவும் இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டார்.

பொலிஸ்மா அதிபர் அங்கு மேலும் விளக்­க­ம­ளிக்­கையில்

அமைதி திரும்­பி­யுள்­ளது

அளுத்­கம, தர்கா நகர் மற்றும் பேரு­வளை பிர­தே­சங்­களில்  தற்­போது அமை­தி­யான  நிலை  காணப்­ப­டு­கின்­றது. அங்கு பாது­காப்பு ஏற்­பா­டுகள்   முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  பொலி­ஸாரும்  இரா­ணு­வத்­தி­னரும்  விசேட அதி­ரடிப் படை­யி­னரும் பாது­காப்பு கட­மையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

என்ன நடந்­தது?

கடந்த 12 ஆம்  திகதி பொசன் போயா தினத்தில் சமித்த தேரர் தனது வாக­னத்தில் தர்கா நகர் ஊடாக தனது  விகா­ரையை நோக்கி சென்­று­கொண்­டி­ருந்தார். அப்­போது  அங்கு  முச்­சக்­கர வண்­டியில் வந்த மூன்று முஸ்லிம் இளை­ஞர்கள்   சமித்த தேரரின் வாக­னத்­துக்கு தடை ஏற்­ப­டுத்­தினர்.   இதன்­போது  வாக­னத்தின் சார­திக்கும் முச்­சக்­கர வண்டி சார­திக்குமிடையில் கைக­லப்பு ஏற்­பட்­டது.    இதனை தடுப்­ப­தற்கு சமித்த தேரர் முற்­பட்­டுள்ளார்.   அதன்­போது  சமித்த தேரர் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக  தேரரின் வாக்கு மூலத்தில் கூறப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து குறித்த மூன்று முஸ்லிம் இளை­ஞர்­களும்   அங்­கி­ருந்து சென்­று­விட்­டனர்.

நான்கு கடை­க­ளுக்கு சேதம்

இந்­நி­லையில் சமித்த தேரர் அளுத்­கம பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு ஒன்றை செய்­ததன் பின்னர் அவர்  மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.  சம்­பவம் இடம்­பெற்ற  இரண்டு மணி நேரத்தில் குறித்த மூன்று இளை­ஞர்­களும் கைது செய்­யப்­பட்­டனர்.  அதன் பின்னர்  300 க்கும் 400 க்கும் இடைப்­பட்டோர் அளுத்­கம பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்­தனர்.  அப்­போது   அங்கு   பதற்ற நிலை ஏற்­பட்­ட­துடன் அங்கு வந்­த­வர்கள்  சென்­று­விட்­டனர். அவர்கள் போகும்­போது நான்கு வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

வர­வேற்பு விழா

அதன் பின்னர் 13 மற்றும் 14 ஆம் திக­தி­களில் எவ்­வி­த­மான  அசம்­பா­வி­தங்­களும் பிர­தேசங்­களில் இடம்­பெ­ற­வில்லை. பொலிஸார் பிர­தே­சத்தின்   முஸ்லிம் மத தலை­வர்­க­ளு­டனும் பிக்­கு­மார்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.   இந்­நி­லையில் 15 ஆம் திகதி  சமித்த தேரர்  வைத்­தி­ய­சா­லை­யி­லிருந்து   வெளி­யே­றினார். அவரை வர­வேற்க விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.
உள்ளூர்   பௌத்­தர்கள் இந்த வேண்­டு­ கோளை விடுத்­த­தாலும்    பொசன் வாரம்  என்­ப­தாலும் இதற்கு அனு­மதி வழங்­கி னோம்.  அந்­த­வ­கையில்  அளுத்­க­மவில்  விழா நடை­பெற்­றது. அதே நேரத்தில்   தர்கா நகர் பள்­ளியில் முஸ்லிம் இளை­ஞ ர்கள் கூடினர்.  இவ்­வாறு  ஒன்று கூடு­வ­த ற்கு இட­ம­ளிக்­க­வேண்டாம் என்று   ஏற்­க­னவே முஸ்லிம்  மத தலை­வர்­க­ளிடம் கேட்­ டி­ருந்தோம். ஆனாலும் அதனை மீறி இவ்­வாறு   ஒன்று கூடினர்.

தாக்­கு­தல்கள்

இந்­நி­லையில் விழா முடிந்து   சமித்த தேரர் தனது வாக­னத்தில் தர்கா நகர் வழி­யாக    விகா­ரையை நோக்கி சென்றார். அப்­போது தர்கா நகர் பள்­ளி­யி­லி­ருந்து கற்­க­ளாலும்   தடி­க­ளாலும்   தாக்­கு­தல்கள்   மேற்­கொள்­ளப்­பட்­டன. அதன் பின்னர் இது கல­வ­ர­மாக   பர­வி­யது.  வன்­மு­றைகள் கிரா­மங்­க­ளுக்கு பர­வி­யது.   15 ஆம் திகதி இரவு    இரண்டு இன குழுக்­க­ளுக்கு இடையில்   இவ்­வாறு கல­வ­ரங்கள் ஏற்­பட்­டன.

பின்னர்  பொலி­ஸாரும் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர்.   இந்தக் கல­வ­ரத்தில் பிக்கு ஒருவர் உயி­ரி­ழந்­த­தாக வதந்­திகள் வெளி­யி­டப்­பட்­டன. ஆனால் அவ்­வாறு பிக்கு எவரும் உயி­ரி­ழக்­க­வி ல்லை. அளுத்­கம பகு­தியில் இரண்டு முஸ் லிம்களும் வெலிப்­பன்ன பகு­தியில் ஒரு  தமி­ழரும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
மர­ணங்கள் எவ்­வாறு நிகழ்ந்­தன?

கேள்வி  : மர­ணங்கள்  எவ்­வாறு ஏற்­பட்­டுள்­ளன?

பதில்  அளுத்­க­மவில் ஏற்­பட்ட இரண்டு  உயி­ரி­ழப்­புக்­களும் வெட்­டுக்­கா­யங்­க­ளி­னாலும்  வெலிப்­பன்­னவில்  தாக்­கு­த­லி­னாலும் மரணம் ஏற்­பட்­டுள்­ளது.
கேள்வி விசா­ர­ணைகள்?

பதில்  விசா­ர­ணைகள் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் மற்றும்  கொழும்பு குற்றத் தடுப்பு பிரி­வினர் ஆகி­யோரால்  மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன.  இது­வரை 55 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில்  35 பேர்  நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு  விளக்க மறி­யலில்  வைக்­கப்­பட்­டுள்­ளனர். எஞ்­சி­ய­வர்கள்  தொடர்ந்தும்  விசா­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றனர்.
பொது­ப­ல­சே­னாவில் யாரும்

கைது செய்­யப்­ப­ட­வில்லை

கேள்வி: கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் பொது­பல சேனா அமைப்பில் உள்­ள­வர்கள் யாரா­வது இருக்­கின்­றார்­களா?

பதில் அவ்­வாறு பொது­பல சேனா உறுப்­பி­னர்கள் யாரும் இல்லை. முறைப்­பாடு செய்­யாமல் சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யாது. பொது­ப­ல­சே­னா­வுக்கு எதி­ராக ஏற்­க­னவே இரண்டு  தட­வைகள்  கொழும்பில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள்  தொடர்பில் நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி: பொது­பல சேனா இந்த விழாவை நடத்த ஏன் அனு­ம­தித்­தீர்கள்?

பதில்   உள்ளூர் பௌத்­தர்­களே இதனை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.    இதனை பொது­ப­ல­சேனா  ஏற்­பாடு செய்­ய­வில்லை.

கேள்வி கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் விப­ரங்­களை கூற முடி­யுமா?

பதில் 7 பேர் முஸ்­லிம்கள். ஏனையோர் சிங்­கள இனத்தைச் சேர்ந்­த­வர்கள்.
ஆயுதம் வழங்­கப்­ப­ட­வில்லை

கேள்வி: பொது­பல சேனாவின் தலை­வ­ருக்கு ஆயு­தங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­னவா?

பதில் இல்லை. அவ்­வாறு ஆயு­தங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி: குறித்த விழா இடம்­பெ­று­வதால் வன்­மு­றைகள்  ஏற்­படும் என பொலிஸார் அறிந்­தி­ருக்­க­வில்­லையா?

பதில்   அவ்­வாறு  இல்லை

கேள்வி:  சேத விப­ரங்கள்  குறித்து?

பதில்  மூவர் உயி­ரி­ழந்­துள்­ளனர். 31 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.  சேதங்கள் குறித்து 138   முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.

பொது மக்கள் ஏமாற வேண்டாம்

கேள்வி: தற்­போ­தைய பாது­காப்பு நிலை­மைகள்?

பதில் கொழும்பில் வெள்­ளிக்­கி­ழமை ஜும்மா தொழுகையின் பின்னர்  கல கங்களில் ஈடுபடும் நோக்கில் பதிவு செய்யப்படாத சில அமைப்புக்கள்   குறுந் தகவல்கள் மற்றும்  பேஸ்புக் மூலம்  பிரசாரம் செய்துவருகின்றன.  பொது மக்கள் அவற்றுக்கு ஏமாந்துவிடவேண்டாம். கொழும்பில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன

அஜித் ரோஹன

செய்தியாளர் மாநாட்டில் அஜித் ரோஹன குறிப்பிடுகையில்
கொழும்பில் வெள்ளிக்கிழமை   பள்ளித் தொழுகையின் பின்னர் கலகங்கள் ஏற்படும் வகையில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு என்ற பதிவு செய்யப்படாத அமைப்பு பேஸ்புக் மற்றும் குறுந்தகவல்கள் ஊடாக பிரசாரம் .செய் கின்றது.  அவ்வாறு எதற்கும் பொது மக்கள் ஏமாற்றமடையவேண்டாம் என்றார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham