நாடுமுழுவதும் முஸ்லிம்களும் தமிழர்களும் ஹர்த்தால்; கிழக்கில் மூன்றாம் நாளாக கடையடைப்பு

Friday, June 20, 20140 comments



அளுத்­கம, - தர்கா நகர், பேரு­வளை மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கண்­டித்து கொழும்பு உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் நேற்று ஹர்த் தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இதனால் இப்­ப­கு­தி­களின் இயல்­பு­நிலை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதே­வேளை கிழக்கு மாகா­ணத்தில், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் காத்­தான்­குடி, ஏறாவூர், ஓட்­ட­மா­வடி, வாழைச்­சேனை போன்ற பகு­தி­க­ளிலும் அம்­பா­றையில், பால­முனை, அட்­டா­ளைச்­சேனை போன்ற பகு­தி­களில் மூன்றாம் நாள­ாகவும் நேற்­றை­ய­தினம் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.
அளுத்­க­மவில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு கண்டனம் தெரி­வித்து முஸ்லிம் உரி­மைகளுக்கான அமைப்பு ஹர்த்­தா­லுக்­கான அழைப்­பினை விடுத்­தி­ருந்­தது. அவ்வமைப்பின் முக்கியஸ்தர் முஜிபுர் ரஹ்மான் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்த அழைப்­பை­ய­டுத்து கொழும்பு உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் கடைகள் மற்றும் வியா­பார ஸ்தலங்கள் மூடப்­பட்டு நேற்று ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

மேல்­மா­காணம்

மேல்­மா­கா­ணத்தில் கொழும்பு மாவட்­டத்தில் பர­வ­லாக முஸ்லிம், தமி­ழர்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மூடப்­பட்­டி­ருந்­தன.

புதுக்­கடை, மாளி­கா­வத்தை, கொம்­ப­னித்­தெரு, பகு­தி­களில் முழு­மை­யாக கடை­ய­டைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதேவேளை புறக்கோட்டை, கிராண் ட்பாஸ்,  தெமட்­ட­கொடை, மரு­தானை, வெள்­ள­வத்தை, மட்­டக்­குளி, தெஹி­வளை, வெல்­லம்­பிட்­டி, கொலன்­னாவை, கொடி­கா­வத்தை உள்­ளிட்ட பல பகு­தி­களில் அதி­க­மான கடைகள் மூடப்­பட்­டி­ருந்­தன. இப்­ப­கு­தி­களில் பொலிஸ் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.
வன்­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்ற பேரு­வளை , அளுத்­கம, தர்கா நகர் மற்றும் அதனை அண்­டிய முஸ்லிம் கிரா­மங்­களில் கறுப்பு கொடிகள் பறக்­க­வி­டப்­பட்டு ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. நேற்­றைய தினம் ஹர்த்தால் அனுஷ்­டிப்­ப­தற்­காக கொடிகள் கட்­டிக்­கொண்­டி­ருந்த இரு­வரை பொலிஸார் கைது செய்­தி­ருந்­தனர்.

களுத்­துறை மாவட்­டத்தில், பாணந்­துறை, மக்­கொன, மஹ­கொட மற்றும் களுத்­துறை நக­ரிலும் முஸ்­லிம்கள் கடை­ய­டைப்பு செய்து தமது எதிர்ப்பை வெளி­யிட்­டனர்.

கம்­பஹா மாவட்­டத்தில், நீர்­கொ­ழும்பு, திஹாரி, கஹ­டோ­விட்ட, மல்­வானை உள்­ளிட்ட பல பகு­தி­களில் கடை­ய­டைப்பு செய்­யப்­பட்­டது.

கிழக்கு மாகாணம்

கிழக்கு மாகா­ணத்தில் சில பகு­தி­களில் மூன்­றா­வது நாளாக நேற்­றை­ய­தி­னமும் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில், மட்­டக்­க­ளப்பு, காத்­தான்­குடி, ஏறாவூர், ஓட்­ட­மா­வடி, வாழைச்­சேனை பகு­தி­களில் ஹர்த்தால் இடம்­பெற்­றது.

அம்­பாறை மாவட்­டத்தில், கல்­முனை, சாய்ந்­த­ம­ருது, மரு­த­முனை, பாலமுனை, கல்­மு­னை­குடி, சம்­மாந்­துறை, இறக்­காமம், நிந்­தவூர், அக்­க­ரைப்­பற்று, அட்­டா­ளைச்­சேனை, பொத்­துவில், ஒலுவில் உள்­ளிட்ட பல பகு­தி­க­ளிலும் அனைத்து கடை­களும் மூடப்­பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. இதே­வேளை அட்­டா­ளைச்­சே­னையில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தின்­போது பிர­தே­ச சபை உறுப்­பினர் அன்ஸில் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் தாக்­கப்­பட்டார்.

திரு­கோ­ண­ம­லையில், மூதூர், கிண்­ணியா, கந்­தளாய், தோப்பூர், புல்மோட்டை உள்­ளிட்ட பல பகு­தி­க­ளிலும் ஹர்த்தால் அனுஷ்க்­கப்­பட்­டது.

வடக்­கு­மா­காணம்

யாழ்ப்­பாணம், வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார் மாவட்­டங்­களில் ஹர்த்தால் இடம்­பெற்­றது. சில பகு­தி­களில் இரா­ணு­வத்­தினர் கடை­களை திறந்து வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­மாறு தெரி­வித்­துள்­ளனர். எனினும் அதற்­கி­ணங்­காத மக்கள் நேற்­றைய­ தினம் ஹர்த்­தாலில் ஈடு­பட்­டனர்.

மன்னார் மாவட்­டத்தில் நேற்று அமை­தி­யான முறையில் ஹர்த்தால் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதனால் மன்னார் நகரில் பெரும்­பா­லான இடங்­களில் வீதிகள் வெறிச்­சோடி காணப்­பட்­ட­துடன் மன்னார் நீதி­மன்ற சட்­டத்­த­ர­ணி­களும் பணி­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­ட­தனால் நேற்று நடை­பெற வேண்­டிய வழக்­குகள் எல்லாம் பிறி­தொரு தினத்துக்கு பிற்போடப்­பட்­டுள்­ளது.
மன்னார் மாவட்­டத்தின் பல இடங்­க­ளிலும் போக்­கு­வ­ரத்­துக்கள் மந்த கதியில் இடம்­பெற்­ற­துடன் பெரும்­பா­லான தமிழ் முஸ்லிம் கடைகள் எல்லாம் மூடப்­பட்டு அப்­பகுதி வெறிச்­சோ­டி­கா­ணப்­பட்­டது.

கிரா­மப் ­பு­றங்­க­ளி­லி­ருந்து மன்னார் நக­ருக்கு தங்கள் தேவையை பூர்­தி­செய்­வ­தற்­காக வந்த பலர் ஏமாற்­றத்­துடன் சென்­ற­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது

தென்­மா­காணம்

தென் மாகா­ணத்தில் காலி நகரம், மாத்­தறை நகர், வெலி­கம மற்றும் சில முஸ்லிம் பிர­தே­சங்­க­ளிலும் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.
வட­மேல்­மா­காணம்

வடமேல்மா­காணம்

வடமேல் மாகா­ணத்தில் புத்­தளம் மாவ ட்டம் முழு­வதும் முஸ்­லிம்கள் கடை­ய­டைப்பு செய்து அர­சுக்கு எதிர்ப்பை தெரி­வித்­தனர். புத்­தளம் நகர், மது­ரங்­குளி, சிலாபம், ஆரச்­சிக்­க­ட்டுவ, பாலாவி, நுரைச்­சோலை, கற்­பிட்டி உட்­பட பல பகு­தி­களில் கடை­ய­டைப்பு இடம்­பெற்­றது. குரு­நாகல் மாவட்­ட­த்தில் ஆங்­காங்கே சில பகு­திகளில் மாத்­திரம் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­பட்­டது. பற­க­ஹ­தெ­னிய, பன்­னல உள்­ளிட்­ட­ப­கு­தி­க­ளிலும் கடைகள் மூடப்­பட்­டி­ருந்­தன.

மலை­யகம்

கண்டி நக­ரிலும் கட்டு­கஸ்­தோட்­டை­யிலும் பெரும்­பா­லான முஸ்­லிம் கடைகள் அடைக்கப்பட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அக்குறனை பகுதியில் காலை வேளையில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. எனினும் பிற்பகல் வேளையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் பொலிஸாரினதும் இராணு வத்தினரதும் அச்சுறுத்தல் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்க ப்படுகின்றது.

பதுளை, வெலிமடை, பண்டாரவளை பகுதிகளிலும் ஆங்காங்கே கடையடைப்பு செய்யப்பட்டது.

கிராண்ட்பாஸ்

கிராண்ட்பாஸ்



மாளிகாவத்தை


புறக்கோட்டை


புறக்கோட்டை


புறக்கோட்டை


புறக்கோட்டை

கோட்டை


கோட்டை


கம்பணித்தெரு


வெள்ளவத்தை


புதுக்கடை



புதுக்கடை

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham