பொதுபல சேனா இயக்கத்தினால் இன்றைய தினம் நடத்தப்பட உள்ள நிகழ்வு தடை
செய்யப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண
தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கம், இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில் கண்டி ஸ்ரீ தலதா
மாளிகையில் சமய வழிபாட்டு நிகழ்வு ஒன்றை நடாத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது இன வன்முறைகளைத்
தூண்டவோ இந்த சமய நிகழ்வு பயன்படுத்திக்கொள்ளப்பட்டால் கடுமையான நடவடிக்கை
எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுபல சேனாய இக்கம் அதிஷ்டான
பூஜையொன்றை நடாத்த உள்ளதாகவும் அதனை நடாத்த தலதா மாளிகை நிர்வாகத்தினர்
இதுவரையில் அனுமதி வழங்கியிருக்கவில்லை எனவும் இதனால் இந்த நிகழ்வு
நடைபெறுவது சந்தேகமே எனவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மஹிங்கனை, கண்டி
மற்றும் கொழும்பைச் சேர்ந்த 300 முதல் 400 பௌத்த பிக்குகளின் பங்களிப்புடன்
சமய நிகழ்வினை நடாத்த உத்தேசித்துள்ளதாக பொதுபல சேனா இயக்கம்
அறிவித்துள்ளது.
பொதுபல சேனாவின் நிகழ்வுக்குத் தடை இல்லை!
Tuesday, June 24, 20140 comments
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment