பொசன் தினத்தை முன்னிட்டு பேருவளை முஸ்லிம் வர்த்தகர்கள் ஏற்பாடு செய்துள்ள அன்னதானம் வழங்கும் வைபவம் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7.00மணிக்கு பேருவளை புகையிரத நிலையத்திற்கருகே நடைபெறும்.
சர்வமத தலைவர்கள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். அஸ்லம், மாகாண சபை உறுப்பினர்களான பியல் நிசான்த்த, இப்திகார் ஜெமீல், பிரசன்ன சஞ்சீவ, முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத், பேருவளை நகர பிதா மில்பர் கபூர், முன்னாள் நகர பிதாக்களான மர்ஜான் பளீல், மஸாஹிம் முஹம்மத், பிரதேச சபைத் தலைவர் குஸ்மன் சில்வா, பிரதேச செயலாளர் ஜானக ஸ்ரீ சந்ரகுப்த்த, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ச உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொள்வர்.

Post a Comment