இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு
Sunday, May 25, 20140 comments
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இம்மீனவர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment