அம்பாந்தோட்டை தனி ராஜ்ஜியம் அல்ல தட்டிக்கேட்க மீண்டும் அங்கு செல்வோம்: ஐ.தே.க.எம்.பி.க்கள் சூளுரை

Monday, April 21, 20140 comments


அம்­பாந்­தோட்­டை­யென்­பது இலங்­கையின் ஒரு பகு­தியே தவிர தனி ராஜ்­ஜியம் அல்ல. இலங்­கை­யர்­க­ளுக்கு நாட்டில் எங்கும் செல்லும் அதி­காரம் உண்டு. எனவே ஊழல் மோச­டி­களை தட்டிக் கேட்க மீண்டும் அம்­பாந்­தோட்­டைக்கு செல்வோம் என சவால் விடும் ஐ.தே. கட்சி, மத்­தள விமான நிலையம் மற்றும் மாகம்­புர துறை­முகம் தொடர்­பாக மறைக்­கப்­பட வேண்­டிய மர்­மங்கள் அர­சாங்­கத்­திடம் இருப்­ப­தா­கவும் குற்றம் சாட்­டி­யது.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள சிறி­கொத்தா கட்சித் தலை­மை­ய­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே ஐ.தே. கட்சி இவ்­வாறு தெரி­வித்­தது.

இங்கு உரை­யாற்­றிய ஐ.தே. கட்சி தலை­மைத்­துவச் சபைத் தலை­வரும் எம்.பி.யுமான கரு ஜய­சூ­ரிய 

மத்­தள விமான நிலையம் மாகம்­புர துறை­முகம் என்­பன மக்கள் பணத்­தி­லேயே நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­வை­யாகும்.

எனவே அதன் பிர­தி­ப­லன்கள் நாட்­டுக்கு மக்­க­ளுக்கு எவ்­வாறு சென்­ற­டை­கின்­றது. இதனால் நாட்­டுக்கு லாபமா? நஷ்­டமா? ஊழல் மோச­டிகள் என பல்­வேறு விட­யங்கள் ஆரா­யப்­பட வேண்­டி­யுள்­ளது. அதனை ஆராய வேண்­டி­யது மக்கள் பிர­தி­நி­தி­களின் கட­மை­யாகும்.

அதற்­கான சிறப்­பு­ரி­மைகள் எம்.பி. மாருக்கு உள்­ளது. சிறைச்­சா­லை­க­ளுக்கும் எம்.பி.க்களால் அனு­மதி பெறாமல் செல்ல முடியும்.

அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் எமது எம்.பி.க்கள் ஐவர் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறை­மு­கங்கள் அதி­கார சபை­யி­டமும் அனு­ம­தியை பெற்றுக் கொண்­ட­தோடு கட்­சியின் தலை­மைத்­துவச் சபை­யி­டமும் அனு­மதி பெற்­றுக்­கொண்டே அங்கு சென்­றது.

ஆனால் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வான குண்­டர்கள் எமது எம்.பி.க்களுக்கு உள்ள உரி­மையை மறுத்து அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தவும் அச்­சு­றுத்­தவும் முயற்­சி­களை எடுத்­தனர்.

துப்­பாக்­கி­க­ளுடன் வீதியில் இறங்கி எமது எம்.பி.க்களை அச்­சு­றுத்தும் நிலை­மையை நாட்டு மக்­களும் ஏன் சர்­வ­தே­சமும் ஊட­கங்கள் மூலம் தெரிந்து கொண்­டனர்.

அன்­றைய தினம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எமது எம்.பி.க்களுடன் போயி­ருக்கா விட்டால் சில­வேளை அவர்­களின் உயிர்­க­ளுக்கு ஆபத்து ஏற்­பட்­டி­ருக்கும்.
எத்­த­னையோ பிரச்­சி­னை­க­ளுக்கு அடக்கு முறைக்கு மத்­தி­யிலும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எமது எம்பி.க்களுக்கு எதி­ரான அர­சாங்க குண்­டர்­களின் அரா­ஜ­கத்தை நன்­றாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் புகைப்­ப­டங்­க­ளு­டனும் செய்­திகள் மூல­மா­கவும் விப­ரித்­தி­ருந்­தார்கள்.

அதற்­காக அனைத்து ஊட­கங்­க­ளிற்கும் அரசு மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளிற்கும் எமது நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கின்றோம்.

உகண்டா வட­கொ­ரியா போன்ற சர்­வா­தி­கார ஆட்­சி­யா­ளர்­களின் நாடு போன்று இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் எமது நாட்­டையும் மாற்றி வரு­கின்­றனர்.

இருண்ட யுகத்தை மீண்டும் ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். இந்த மோச­மான சம்­ப­வத்­திற்கு எதி­ராக பொலிஸ் மா அதிபர் பார­பட்­ச­மற்ற விசா­ர­ணை­களை நடத்த வேண்டும்.

இது தொடர்பில் சபா­நா­யகர் சமல் ராஜபக் ஷவிற்கும் முறைப்­பாடு செய்­துள்ளோம். எனவே நீதி­யான விசா­ர­ணைகள் நடை­பெறும் என்ற நம்­பிக்­கையில் இருக்­கின்றோம் என்றும் கரு ஜய­சூ­ரிய எம்.பி தெரி­வித்தார்.

எரான் விக்­கி­ர­ம­ரட்ண எம்.பி-

விடு­தலைப் புலி­க­ளையும் பிர­பா­க­ர­னையும் இல்­லா­தொ­ழித்து எமது படை­யினர் அர்ப்­ப­ணிப்பு செய்து நாட்டை மீட்­டெ­டுத்­தனர். ஏன்? அனைத்து இலங்­கை­யர்­களும் நாட்டில் அனைத்து இடங்­க­ளுக்கும் சுதந்­தி­ர­மாக போய் வர வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஆகும்.

ஆனால் எமது படை­யினர் அர்ப்­ப­ணிப்பு செய்து பெற்­றுக்­கொ­டுத்த சுதந்­திரம் இன்று அர­சாங்­கத்தால் மீறப்­ப­டு­கின்­றது. மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு நாட்டில் சுதந்­தி­ர­மாக நட­மாட முடி­யா­துள்­ளது தாக்­கப்­ப­டு­கின்­றனர்.

இது மக்கள் பிர­தி­நி­தி­களை அல்ல மக்­களை தாக்­கு­வ­தற்கு ஒப்­பா­ன­தாகும். ஐ.தே. கட்சி எம்.பி மாருக்கு எதி­ரான தாக்­குதல் அல்ல. அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் எதி­ரான தாக்­கு­தலே மத்­தள சம்­ப­வ­மாகும்.
தெற்­கா­சிய வல­யத்­தி­லுள்ள அனைத்து நாடு­க­ளிலும் தகவல் அறியும் உரிமை உள்­ளது. அதற்­கான சட்­டங்கள் அமுலில் உள்­ளன.

ஆனால் இலங்­கையில் மட்டும் தான் தகவல் அறியும் உரிமை மறுக்­கப்­பட்­டுள்­ளது. நாம் அதற்­கான சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வந்தோம் ஆனால் அரசின் எதிர்ப்பால் தடைப்­பட்­டது.

மத்­தள விமான தளத்­திற்கு ஒரு வரு­டத்­திற்கு 10 இலட்சம் பய­ணிகள் வரு­வார்கள் என்ற இலக்­கு­ட­னேயே கடன் வாங்கி நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. ஆனால் இங்கு ஒரு நாளைக்கு 25 -30 பய­ணி­க­ளுக்கு இடைப்­பட்ட தொகை­யி­னரே வரு­கின்­றனர்.

இதனை கூட்டிப் பார்த்தால் ஒரு வரு­டத்­திற்கு 1 இலட்­சத்­திற்கும் குறை­வான பய­ணி­களே வரு­கின்­றனர். இந்த விமான நிலை­யத்தால் நாட்­டுக்கோ அல்­லது மக்­க­ளுக்கோ நன்மை இல்லை. இவ்­வா­றான நிலை­மை­களை ஆராய்ந்து ஐ.தே. கட்சி ஆட்சி காலத்தில் அதனை எவ்­வாறு சரி செய்ய முடியும் என்­பன தொடர்பில் ஆரா­யவே நாம் மத்­தள சென்றோம்.

அத்­தோடு அங்­குள்ள ஒப்­பந்­தக்­கா­ரர்கள் தொடர்­பா­கவும் பாரிய பிரச்­சி­னைகள் உள்­ளன. இவற்றை ஆராய்ந்து மக்­க­ளுக்கு உண்­மை­களை தெரி­யப்­ப­டுத்த வேண்­டி­யது எமது கட­மை­யாகும்.

அந்த கட­மையை நிறை­வேற்ற சென்ற எங்­களைத் தான் அர­சாங்­கத்தின் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் துப்­பாக்­கி­களை கைகளில் எடுத்துக் கொண்டு விரட்­டினர். மிரட்­டினர் என்றார்.

ஆர். யோக­ராஜன் எம்.பி.

உயர் பொலிஸ் அதி­கா­ரி­களும் பொலி­ஸாரும் பார்த்துக் கொண்­டி­ருக்­கை­யி­லேயே முட்­டை­க­ளாலும் தக்­கா­ளி­க­ளாலும் எமது எம்.பி.க்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்து.

பல பொலிஸ் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு அன்­றைய தினம் நாம் எதிர் நோக்­கிய பிரச்­சி­னை­களை எடுத்­துக்­கூறி பாது­காப்பை கோரினோம். ஆனால் அந்தப் பாது­காப்பு கிடைக்­க­வில்லை என்றார்.

அஜித் பி. பெரேரா எம்.பி.

அம்­பாந்­தோட்டை என்­பது இலங்­கையின் ஒரு பகு­தியே தவிர அது தனி­ராஜ்­ஜியம் அல்ல. எனவே இலங்கை பிர­ஜைகள் அனை­வரும் நாட்டில் எங்கும் சுதந்­தி­ர­மாக சென்று வர அதி­கா­ர­மிக்­க­வர்கள்.

மத்­த­ளவில் எமக்­கெ­தி­ரான அடா­வ­டித்­த­னங்­களால் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான எமது தேடல்­களை தடுத்து விட முடி­யாது. நாம் எதற்கும் அஞ்ச மாட்டோம்.

மீண்டும் அம்­பாந்­தோட்­டைக்கு செல்வோம் மத்­த­ள­விலும் மாகம்­புர துறை­மு­கத்­திலும் மறைக்­கப்­படும் உண்­மை­களை என்­ன­வென்­பதை ஆராய்வோம். மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்.

எம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அச்சுறுத்தியவர்கள் யாரென்பதற்கு ஊடகங்களில் சாட்சிகள் உள்ளன. எனவே சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு பிரச்சினை இருக்காது.

எனவே இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். தென் பகுதி பொலிஸார் மீது எமக்கு நம்பிக்கையில்லை. பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர்களின் கருத்துக்கள் வெட்கப்பட வேண்டியவையாகும் என்றார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எம்.பி.க்களான அஜித் மன்னப்பெரும, நளின் பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham