பொதுபல சேனாவினருக்கு கொலை அச்சுறுத்தலாம் - ஜனாதிபதிக்கு கடிதம்

Monday, April 21, 20140 comments


(எம்.எம். எம்)

மேலைத்­தேய நாடு­களின் சதித்­திட்­டத்­திற்கு அமை­வாக நாட்டில் ஆட்சி மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­தவும், பௌத்த மதத்­தினை இழி­வுக்­குள்­ளாக்கும் வகையில் செயற்­ப­டு­வ­தாகவும் எமது அமைப்பின் மீது சுமத்தும் குற்­றச்­சாட்­டுக்­க­ளினால் எமது அமைப்­பி­ன­ருக்கு அச்­சு­றுத்தல் அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. இத்­த­கைய நிலையில் எமது உயி­ருக்கு ஏதா­வது ஆபத்து ஏற்­படின் அதற்கு
அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்டும் என்று பொது பல­சேனா அமைப்பு ஜனா­தி­ப­திக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்­ளது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது பல­சேனா அமைப்பு அனுப்பி வைத்­துள்ள கடிதம் தொடர்பில் அந்த அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பாளர் மற்றும் நிறை­வேற்று குழு உறுப்­பினர்  விதா­னகே  தெரி­விக்­கையில்,
பொது பல­சேனா அமைப்­பா­னது இந்­நாட்டின் சிங்­கள பௌத்த கலா­சா­ரத்­தி­னையும் பண்­பா­டு­க­ளையும் பாது­காக்கும் நோக்­கு­க­ளு­டனே செயற்­பட்டு வரு­கி­றது. இத்­த­கைய நிலையில் தற்­போது நாட்டில் அந்­நிய அடிப்­படை வாதி­க­ளி­னு­டைய ஆதிக்கம் மேலோங்­கி­யுள்­ளது. இதனால் இந் நாட்டில் பௌத்த மத கலா­சாரம் முற்­றாக அழித்து விட கூடிய அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே அவற்றை தடுக்கும் நோக்­கு­டனே எமது அமைப்பு செயற்­பட்டு வரு­கி­றது.
இத்­த­கைய சம்­பவம் தொடர்பில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்­களும் ஆத­ரவு நல்­கு­கின்­றனர். முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் இந்­நாட்டில் இஸ்­லா­மிய கலா­சா­ரத்­தினை திணிக்க முற்­ப­டு­கின்­றனர். இதற்கு நாங்கள் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். இது பௌத்த நாடு. இந்த நாட்டை துண்­டாட விரும்­ப­மாட்டோம்.

எனவே இந்­நாட்டின் பௌத்த தர்­மத்­தினை பாது­காத்து வரு­கிறோம். இத்­த­கைய நிலையில் அரசின் அமைச்­சர்கள் எம் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றனர். அதா­வது எமது அமைப்­பா­னது மேலைத்­தேய நாடு­களின் சதித்­திட்­டங்­க­ளுக்கு அமை­வாக இந்­நாட்டின் பௌத்த மதத்­தினை இழி­வுக்­குட்­ப­டுத்த முனை­வ­தா­கவும், ஏனைய மதத்­த­வர்­களை இனக்­க­ல­வ­ரங்­க­ளுக்கு தூண்­டுதல் செய்­வது தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வது மாத்­தி­ர­மின்றி தற்­போ­தைய பொரு­ளா­தா­ரத்தை கவிழ்த்து மேலைத்­தேய நாடு­களின் விருப்­பத்­திற்­கேற்ப அர­சாங்­க­மொன்றை உரு­வாக்கும் நோக்­குடன் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் குற்­றங்கள் சுமத்­து­கின்­றனர்.
இது முற்­றிலும் தவ­றான குற்­றச்­சாட்­டாகும். இவற்றை நாங்கள் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம். இத்­த­கைய நிலையில் குறித்த குற்­றச்­சாட்­டுக்­களை மைய­மாக கொண்டு எமது அமைப்­பி­ன­ருக்கு மரண அச்­சு­றுத்தல் விடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை எமது உயிருக்கும் ஆபத்தும் நேரிட வாய்ப்பும் உள்ளது.

ஆகவே மேற்குறித்த விடயங்களில் எமது உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அதற்கான பொறுப்புக்களை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham