கசினோ சூதாட்ட சட்டமூலத்தை எதிர்ப்போம் என்கிறது ஜே.வி.பி

Monday, April 21, 20140 comments


எதிர்­வரும் 24 ஆம் திகதி அர­சாங்கம் மீண்டும் கசினோ சூதாட்­டத்தை சட்­ட­மாக்கும் சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­க­வுள்­ளது. இதனை எதிர்த்து வாக்­க­ளிப்போம். அது மட்­டு­மன்றி இச்­ச­மூக விரோத சட்­டத்தை எதிர்த்து மக்­களை அணி­தி­ரட்­டுவோம் என்றும் ஜே.வி.பி.யின் பிர­சார
செய­லா­ளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரி­வித்தார்.

அமைச்­ச­ர­வை­யி­லுள்ள தேசப்­பற்­றா­ளர்கள் இன்று பற்­றா­ளர்­க­ளாக மாறி விட்­டனர் என்றும் அவர் குற்றம் சாட்­டினார்.

பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலை­மை­ய­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி. இதனை தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் மது­வுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து புதி­ய­தொரு சமூ­கத்தை உரு­வாக்­குவோம் என்ற மஹிந்த சிந்­த­னை­யுடன் அர­சாங்கம் 2005 இல் ஆட்­சிக்கு வந்­தது.

அதன் பின்னர் தடம்­பு­ரண்ட அர­சாங்கம் 2010 ஆம் ஆண்டில் கசினோ சூதாட்ட சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தது.

இச் சட்ட மூலத்தில் கொழும்பு டி.ஆர்.விஜே­வர்த்­தன மாவத்­தையை கசினோ வல­ய­மாக்கி நாட்டில் பிர­தே­சங்­களில் இயங்கும் கசி­னோக்­களும் அவ்­வ­ல­யத்­திற்­குள்­ளேயே கொண்டு வரப்­ப­டு­மென்றும் தெரி­வித்­தது.

இதற்கு அர­சி­லுள்ள ஹெல உறு­ம­யவும் ஆத­ரவு வழங்­கி­யது. 2013 ஆண்டு செப்­டெம்பர் மாதம் விசேட வர்த்­த­மானி அறி­வித்­த­லொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கப்­பட்­டது. அது டி.ஆர்.விஜே­வர்­தன வீதியை தாண்டிச் சென்­றது. கொம்­பனி வீதி கிலெனி வீதி ஜஸ்டிஸ் அக்பர் மாவத்­தை­யிலும் கசினோ சூதாட்டம் பந்­த­யத்­துடன் இரண்டு ஹோட்­டல்கள் அமைக்­கப்­ப­டு­மென தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்கு நாட்­டுக்குள் கடு­மை­யான எதிர்ப்பு கிளம்­பி­யது எதிர்க்­கட்­சிகள் பாரா­ளு­மன்­றத்­திற்­குள்ளும் வெளி­யேயும் இதனைக் கூட்­டாக எதிர்த்­தது. அதே­போன்று மகா­நா­யக்க தேரர்­களும் அனைத்து மதத் தலை­வர்­களும் எதிர்த்­தனர்.
கசினோ சூதாட்டம் சட்­ட­மாக்­கப்­பட்டால் நாட்டில் விப­சாரம் மற்றும் சமூக கலா­சார சீர­ழி­வுகள் தலை தூக்கி நாடு சின்­னா­பின்­ன­மாகும்.

பாதாள உலகக் கோஷ்­டிகள் தலை­தூக்கும் ஆட்­சி­யா­ளார்­களை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக கசினோ சூதாட்டம் மாறும் என இதனால் ஏற்­படும் விளை­வு­களை நாடு முழு­வதும் மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தினோம்.

நாடு முழு­வதும் எதிர்ப்­புகள் தலை தூக்­கியும் அர­சாங்கம் இச்­சட்ட மூலத்தை நிறை­வேற்­று­வதை தற்­கா­லி­க­மாக சுருட்­டிக்­கொண்­டது.

இன்று மீண்டும் இச்­சட்ட மூலத்தை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக 3 வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை ஜன­வரி 30 ஆம் திகதி அரசு வெளி­யிட்­டுள்­ளது.
அதில் கசினோ சூதாட்டம் பந்­தயம் என்ற சொற்­களை அகற்றி அழ­கான சிங்­கள வார்த்­தை­களால் மாயா­ஜாலம் காட்டி கொழும்பில் மூன்று ஹோட்­டல்கள் அமைக்­கப்­ப­டு­வ­தோடு அத­னோடு இணைந்த வேறு வச­தி­களும் அங்கு ஏற்­ப­டு­மென்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மை­யவே எதிர்­வரும் 24ம் திகதி இச்­சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இணை வச­திகள் என்­பது என்ன என்­பதை அர­சாங்கம் குறிப்­பிட வேண்டும். இது வேறு ஒன்றும் அல்ல. கசினோ சூதாட்­டமும் பந்­த­யமும் என்­ப­தே­யாகும்.

அதனை மூடி மறைத்து கசினோ சூதாட்­டத்தை அர­சாங்கம் சட்­ட­மாக்க முயற்­சிக்­கின்­றது. நாட்டை சீர­ழிக்கும் இதற்கு அமைச்­ச­ர­வை­யி­லுள்ள தேசப்­பற்­றா­ளர்­களும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளனர்.

இதன் மூலம் தேசப்­பற்­றா­ளர்கள் கசினோ பற்­றா­ளர்­க­ளாக மாறி­யுள்­ளனர். அது மட்­டு­மல்­லாது கொத்­த­மல்லி, வெள்­ளைப்­பூண்டு, பருப்பு என மக்­களின் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளிற்­கான வரி­களை அதி­க­ரித்­துள்ள அர­சாங்கம் கசினோ சூதாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு 10 வரு­டத்­திற்கு மேலான அனைத்து வரி­க­ளிலும் வரி விலக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

நாய்­களின் உணவு வகை­களின் விலை­களை குறைத்து சூதாட்­டத்­திற்கு வரி­வி­லக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. சம்­புத்­தத்­துவ ஜயந்­திக்கு ஒழுக்க சீலத்­துடன் அணி திரள்வோம் என்ற அர­சாங்கம் இன்று அதனை கசினோ சூதாட்­டத்­திற்­கான ஒழுக்க சீலத்­துடன் அணி திரள்வோம் என மாற்றிக் கொள்ள வேண்டும். இலங்­கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியின் மூலோ­பா­ய­மாக கசினோ சூதாட்­டத்தை அர­சாங்கம் உயர்த்­தி­யுள்­ளது.

எனவே இதனை எதிர்ப்­ப­வர்­களை அர­சாங்கம் தேசத்­து­ரோ­கி­க­ளாக முத்­திரை குத்­தி­னாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

எதிர்­வரும் 24 ம் திகதி கசினோ சூதாட்டம் மற்றும் பந்தயம் பிடிக்கும் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு எதிர்த்து வாக்களிப்போம். அதுமட்டுமன்றி நாட்டை விபசார கலாசாரத்தில் சமூக விரோத செயற்பாடுகளில் தள்ளிவிடும் இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவோம். போராடுவோம்.

இவ்விடயம் தொடர்பில் அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று எதிர்க்க அனைத்து சக்திகளும் முன்வர வேண்டும் என்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham