மதம் தொடர்பில் அச்சம் தேவையில்லை – ஜனாதிபதி
Sunday, April 20, 20140 comments
நாட்டின், மத சுதந்திரம் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சகல மதங்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிலர், நாட்டின் அபிவிருத்தியை கேலிக்கு உட்படுத்தி, இல்லாத பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டை இன்னல்களுக்கு உட்படுத்த முயல்வதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகாவலி பீ மற்றும் சீ வலய 5 ஆயிரத்து 500 விவசாய குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment