கட்சித் தாவியவர்களுக்கு இனி இடமில்லை

Tuesday, December 30, 20140 comments

கட்சித் தாவியவர்கள் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சித் தாவிய எவருக்கும் இனி அரசாங்கத்தில் இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் இணைந்து கொள்வோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு எனவும், எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வோர் பற்றி சொல்வதற்கில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் வரையிலான பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஆளும் கட்சி விட்டு விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதனை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham