'மஹிந்த லொக்காட்ட கேதரய்' - ஹரீன்
Tuesday, December 16, 20140 comments
'லெக்காட்ட கேதரய்' மஹிந்த ராஜபக்ஷவிற்கு பேரவா ஏற்பட்டுள்ளதாக ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கிருலபணையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பில் கூறுகையில்,
சாப்பாடு வீட்டுக்கு சென்றால் முதலாவது பந்தியில் மிகவும் சந்தோசத்துடன் உணவு பறிமாரப்படும். இரண்டாவது பந்திக்கும் விருப்பத்துடன் பரிமாறுவர். மூன்றாவது பந்தியிலும் ஒருவர் உணவு உண்பதற்காக இருந்தால் 'கேதரய்' என்று சொல்வார்கள். இப்போது 'லொக்காட்ட கேதரய்'. முதலாவது முறை தேர்தலில் போட்டியிட்டபோது. அவருக்கு வாக்களித்து மக்கள் வெற்றிபெறசெய்தனர். இரண்டாவது தடவை இதனோடு இவர் சென்றுவிடுவான் என நினைத்து முதல் முறையை விட அதிகமான வாக்குகளை அள்ளிக்கொண்டுத்து வெற்றிபெற செய்தனர். ஆனால் அவர் அதிகார ஆசையில் மூன்றாவது முறைக்காகவும் போட்டியிட கேட்கிறார். இப்போது அவருக்கு 'கேதரய்'தான் என ஹரீன் தெரிவித்தார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment