நாமல் உப ஜனாதிபதி போல் செயற்படுகிறார் – ஹிருணிகா
Saturday, December 20, 20140 comments
இளைஞர்கள், யுவதிகளுக்கு உண்மை என்ன என்பது புரியும் எனவும், அவர்கள் குரக்கன் சால்வை மாயையில் சிக்க மாட்டார்கள் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இளம் மக்கள் பிரதிநிதிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை அரசாங்கத்தில் இருக்கும் எவரும் விரும்பவில்லை.
நாமல் ராஜபக்ச மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவாக நாட்டில் இருக்கும் ஒரே இளம் அரசியல்வாதி. நாமல் உப ஜனாதிபதியை போல் செயற்படுகிறார். அவரை ஐயா என்று அழைக்கும் நிலைமை அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல், கலை, விளையாட்டு என அனைத்தையும் குடும்ப ஆட்சிக்கு உட்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் வெறும் பொம்மைகள் மாத்திரமே.
இந்த நிலைமை மாற்றியமைத்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பொது வேட்பாளருடன் இணையுமாறு நான் இளைஞர்கள், யுவதிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றேன் என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
இளம் அரசியல்வாதிகளான முன்னாள் அமைச்சர் துமிந்த சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன, ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment