பௌத்த மத விஸ்தரிப்பும் முன்னைய மதங்களும் தொடர் (4)

Thursday, December 18, 20140 comments

மகத அர­சனின் பிள்­ளை­க­ளான மஹிந்த மற்றும் சங்­க­மித்தை ஆகியோர்
இலங்­கைக்கு வந்­த­போது அரச குடும்­பத்தைச் சேர்ந்த பலர் இவர்­க­ளுடன்
இணைந்து செயற்­ப­ட­லா­னார்கள்.

கற்­கு­கை­களில் வாழ ஆரம்­பித்த இவர்கள் மக்­க­ளிடம் யாசித்து, உண்டு
மிகவும் ஏழ்­மை­யா­கவே வாழ்ந்­தனர். நாடு பூராவும் சென்று மதப்
பிர­சா­ரத்­திலும் போத­னை­யிலும் ஈடு­பட்­டனர்.


அவர்­களின் போத­னையில் ஆகர்­ஷிக்­கப்­பட்ட மக்கள் புதிதாய் நாட்­டுக்கு
வந்த மதத்தை ஏற்­றுக்­கொண்­டனர். திஸ்ஸ மன்னன் மீது மக்­க­ளுக்கு இருந்த
வர­வேற்பும் கூட மக்கள் பௌத்த மதத்தை ஏற்­றுக்­கொள்ள பிர­தா­ன­மான
கார­ண­மாக அமைந்­தது.

எல்லா கோத்­தி­ரங்­க­ளையும் இணைத்து  சிங்­கள சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப
கார­ண­மாக பௌத்த மதம் தொழிற்­பட்­ட­மை­யும்­கூட மக்­க­ளுக்கு பௌத்த
மதத்தின் மீது சிறந்த வர­வேற்பு ஏற்­பட்­டது.

புத்த மதத்தின் வரு­கைக்கு முன்னர் இலங்­கையில் இருந்த கோத்­தி­ரங்கள்
என்ன மதத்தைப் பின்­பற்­றினர் என்­பது தொடர்பில் வர­லாற்­றா­சி­ரி­யர்கள்
பின்­வ­ரு­மாறு ஒரு பதிவைத் தரு­கின்­றனர்.

கிறிஸ்து வருடம் ஆரம்­பிக்க 500 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இந்­தி­யாவில்
இருந்து மக்கள் இலங்­கையில் வந்து குடி­யே­றினர். இதனால் மக்கள்
அக்­கா­லப்­ப­கு­தியில் வட இந்­தி­யாவில் காணப்­பட்ட மதத்­தையே
பின்­பற்றி இருக்க வேண்டும்.

அந்தக் காலப்­ப­கு­தியில் இரா­மா­யணம், மகா­பா­ரதம் ஆகிய காவி­யங்­களில்
பின்­பற்­றப்­பட்­ட­தாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மதங்­களே
அக்­காலப் பகு­தியில் முன்­ன­ணியில் திகழ்ந்த மதங்­க­ளாகும்.

இந்த வர­லாற்றுக் கதை­களை மைய­மாகக் கொண்ட சில கட­வுள்­களை இலங்­கையில்
வாழ்ந்­தோரும் ஏற்று வணங்­கி­ய­மைக்­கான சில கல்­வெட்டு ஆதா­ரங்­களை காண
முடி­கி­றது.

பௌத்த மதத்தின் வரு­கைக்குப் பின்னர் ஏற்­கெ­னவே நாட்டில் இருந்த
மதங்­க­ளுடன் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­ட­மைக்­கான சான்­றுகள்
காணப்­படவில்லை.

பௌத்த மதம் நாட்டில் பர­விய போதிலும் பிரா­மண குலத்தைப் பின்­பற்­றிய
சிலரும் நாட்டில் இருந்­துள்­ளனர். இவர்கள் அரச சபை­யிலும் உயர்
பத­வி­களை வகித்­த­மைக்­கான ஆதா­ரங்­களும் காணப்­ப­டு­கின்­றன.
அதேபோல் அதற்குப் பின்­னரும் இலங்­கையில் வந்து குடி­யே­றிய அதி­க­மானோர்
பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்­டனர்.

அதேபோல் தமிழ் இந்­துக்­களும் முஸ்­லிம்­களும் தமது மதத்தைப் பின்­பற்றி
தமது தனித்­து­வங்­க­ளோடு நாட்டில் வாழ்ந்­தனர்.
வட இந்­தி­யாவில் இருந்து ஆரிய மொழி பேசும் ஒரு குழுவும் தென்
இந்­தி­யாவில் இருந்து தமிழ் பேசும் மக்கள் குழுவும் இலங்­கைக்கு
வந்­தனர். தென்­னிந்­திய மக்­க­ளுக்கும் இலங்­கைக்கும் மிகத் தொன்­மை­யான
வர­லாற்று உறவு இருந்­துள்­ளது.

விஜய மன்னன் மது­ரையை ஆண்ட பாண்­டிய மன்­னனின் வம்­சத்தைச் சேர்ந்த ஒரு
பெண்ணை மணந்­த­தா­கவும் அந்த அர­சி­யுடன் நூறு கன்­னி­யரும் பதி­னெட்டு
குலங்­களைச் சேர்ந்த ஆயிரம் குடும்­பங்­களும் இலங்­கையில் வந்து
குடி­யே­றி­ய­தா­கவும் வர­லாற்றுக் கதைகள் சான்று பகர்­கின்­றன.

கிறிஸ்­தவ வரு­டத்தின் மூன்றாம் நூற்­றாண்டின் இறுதிக் காலப்­ப­கு­தியில்
சேன மற்றும் குத்­திக என்ற இரண்டு தமிழ் தலை­வர்கள் சுமார் இரு­பது
ஆண்­டுகள் அநு­ராதபுர இரா­ஜி­யத்தை ஆட்சி செய்­த­தா­கவும் அடுத்த
நூற்­றாண்டில் எல்­லாளன் மன்னர்  40 வருடம்  அநுராதபுரத்தை ஆட்சி
செய்ததாகவும் வரலாறு சான்று பகிர்கிறது.


இந்தக் காலப்பகுதி வரும் போது இந்து மதத்தை பின்பற்றிய மக்கள் நாட்டில்
வாழ்ந்து கொண்டு தான் இருந்துள்ளனர் என்பதை வரலாற்றில் இருந்து புரிந்து
கொள்ள முடிகிறது.

தொடரும்....
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham