எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை!
Thursday, November 13, 20140 comments
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்கட்சிகள் கூட்டணியாக பொதுவேட்பாளரை பெயரிடவிருப்பதாகவும் இந்த பெயர் ஜனாதிபதி தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பின்பே அறிவிக்கப்படும் எனவும் இது சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை 14 கைச்சத்திடப்படும் என்றும் இதில் 3 திட்டங்கள் உள்ளடக்கப்படும் என்றும் தெரியவருகின்றது.
இந்த பொது வேட்பாளர் யார் என்பதை தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பிற்கு பின்பே வெளியிடப்படும் என்றும் தெரியவருகின்றது.
பொது வெட்பாளராக ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வண- மாதுளுவாவே சோபித்த தேரர் ஆகியோரின் பெயர்களில் ஒருவர் தெரிவு செய்யப்படலாமென தெரியவருகின்றது.
அதில் மிக முக்கியமாக சந்திரிக்கா குமாரதுங்கவின் பெயர் தெரிவாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த பொது வேட்பாளர் சர்வ அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றவே என்றும் 17வது அரசியல் அமைப்பை அமுல்படுத்தும் நோக்கத்தை கொண்டதாகும் என்றும் சொல்லப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment